Health & Lifestyle

Tuesday, 15 March 2022 10:08 AM , by: Elavarse Sivakumar

அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தென்காசி மாவட்டம், குழந்தைகள் பாதுகாப்பு அலகில், பாதுகாப்பு அலுவலர், உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட 8 பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். காலியாக உள்ள 11 பணியிடங்களும் தற்காலிக அடிப்படையில் நிரப்ப்பட உள்ளன.

பாதுகாப்பு அலுவலர் (Security Officer)

காலியிடங்கள் : 2

கல்வித் தகுதி (Educational Qualification)

இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 வருடம் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் (Salary)

ரூ.21,000

சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Probation Officer)

காலியிடங்கள் : 1

கல்வித் தகுதி (Educational Qualification)

பி.எல் அல்லது எல்.எல்.பி வழக்கமான முறையில் சட்டம் பயின்றிருக்க வேண்டும். ஒரு வருடம் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் (Salary)

ரூ.21,000

ஆற்றுப்படுத்துநர் (Counselor)

காலியிடங்கள் : 1

கல்வித் தகுதி (Educational Qualification)

இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருடம் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் (Salary) 

ரூ.14,000

சமூகப்பணியாளர் (Social Worker)

காலியிடங்கள் : 2

கல்வித் தகுதி (Educational Qualification)

இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருடம் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் (Salary)

ரூ 14,000

கணக்காளர் (Accountant)

காலியிடங்கள் : 1

கல்வித் தகுதி (Educational Qualification)

பி.காம் அல்லது எம்.காம் படித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் (Salary)

ரூ.14,000

தகவல் பகுப்பாளர் (Information Analyser)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி (Educational Qualification)

பி.ஏ/பிசிஏ/பி.எஸ்சி புள்ளியியல் அல்லது கணக்கு படித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் (Salary)

ரூ.14,000

உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant and Computer Operator)

காலியிடங்கள் : 1

கல்வித் தகுதி (Educational Qualification)

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி கல்வியில் பட்டய பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் (Salary)

ரூ.10,000

புறத் தொடர்பு பணியாளர் (External Liaison Officer)

காலியிடங்கள் : 2

கல்வித் தகுதி (Educational Qualification)

பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் (Salary)

ரூ.8,000

வயதுத் தகுதி (Age Limit)

40 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.

தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2022/03/2022030764.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி (Address)

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் (பொ), அரசினர் குழந்தைகள் இல்லம், கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளி அருகில், ரெட்டியார்பட்டி (இருப்பு), நெட்டூர் வழி, ஆலங்குளம் தாலுகா, தென்காசி – 627854

விண்ணப்பிக்கக் கடைசி தேதி (Last Date)

 23.03.2022

மேலும் படிக்க...

4 பிரீமியம் செலுத்தினாலே போதும்- ரூ.1 கோடி கிடைக்கும்வரை!

கொரோனாவால் அதிகரித்த ஆண்மைக் குறைபாடு பிரச்னை - ஆய்வில் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)