Health & Lifestyle

Wednesday, 02 November 2022 07:27 PM , by: T. Vigneshwaran

Coriander seeds

இந்தியர்களின் சமையலில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ள கொத்தமல்லி, மிகுந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதனுடைய விதை மற்றும் இலை என அனைத்துமே உண்ணக் கூடியவை தான். அவ்வகையில் சுவைக்காக மட்டுமின்றி, கொத்தமல்லியை நமது உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்துகிறோம். அதிலும் குறிப்பாக, கொத்தமல்லி விதைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த நன்மையை அளிக்கிறது. இவ்வாறாக, பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் கொத்தமல்லி, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில், எப்படி பயன்படுகிறது என்பது பற்றி பார்ப்போம்.

நீரிழிவைக் குணப்படுத்தும் கொத்தமல்லி

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த கொத்தமல்லி எவ்வகையில் உதவுகிறது என்பது குறித்து, அமெரிக்க நாட்டின் தென் புளோரிடாவில் அமைந்திருக்கும் ஃப்ளோரிடியன் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின் அடிப்படையில் கொத்தமல்லி பல விதங்களில் நம் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் கொத்தமல்லியின் மிக முக்கிய பலன்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

கொத்தமல்லியின் நன்மைகள்

நீரிழிவு நோயாளிகளின் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் கொத்தமல்லி விதைகள் பெரும்பங்கு வகிக்கிறது என நம்பப்படுகிறது. இது இன்சுலின் செயல்பாட்டை பராமரிக்க உதவி புரிவதால், இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் மிகுந்த உதவியாக இருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வு முடிவுகளின்படி, ஸ்ட்ரெப்டோசோடோசின் தூண்டப்பட்ட நீரிழிவு, எலிகளில் கணைய பீட்டா செல்களில் இருந்து இன்சுலின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தி அடக்குவதில் கொத்தமல்லி விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன எனத் தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க: 

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் நவோதயா பள்ளிகள்

தமிழகத்தில் தீவிரமடையும் கனமழை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)