நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 July, 2021 8:03 AM IST

சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான கோவிட் தடுப்பூசிக்கு ஓரிரு நாள்களில் அவசர கால பயன்பாட்டிற்கான ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

உலகை உலுக்கியது (Shook the world)

உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. ஆரம்பத்தில் லட்சக்கணக்கில் இருந்து கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஏதுவாக இரவு நேர ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டன.

பாதிப்புக் குறைந்தது (The impact is minimal)

இதன் பயனாக தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேல் சென்ற தினசரி கொரோனா பாதிப்பு, படிப்படியாக 3 ஆயிரமாகக் குறைந்தது.

உலக நாடுகள் (Nations of the world)

இதையடுத்து, கொரோனா என்றக் கோர தாண்டவம் ஆடிய பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

2 வகைகள் (2 types)

இந்தியாவில் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவேக்சின், அஸ்டா ஜெனகா மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசிகள் (Vaccines)

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக்-வி, மாடர்னா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசிகள் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

12 வயதிற்கு மேற்பட்டோருக்கு (For those over 12 years of age)

இந்நிலையில், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கோவிட் தடுப்பூசியை சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ளது. சைகோவ்-டி (ZyCoV-D) என்னும் இந்த தடுப்பூசியை சிறுவர்கள் மற்றும் வயது வந்தோருக்கும் செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை தரவுகளை அந்நிறுவனம், இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சமர்பித்தது.

ஒப்புதல் (Approval)

இந்நிலையில், சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள சைகோவ்-டி தடுப்பூசிக்கு ஓரிரு நாள்களில் அவசர கால பயன்பாட்டிற்கான ஒப்புதல் வழங்கப்படும் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதற்கான தரவுகளை ஆராய்வதற்காக இந்த வாரம் நிபுணர் குழு கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3 தவணைகள் (3 installments)

உலகின் முதல் பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பூசியான சைகோவ்-டி, மூன்று தவணைகளாக செலுத்தப்படவுள்ளது. அவசர கால பயன்பாட்டுக்காக 12 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதேபோல கோவேக்சின் தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கான அனுமதியும் செப்டம்பரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

27 மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் மாவட்டத்திற்குள் - மாவட்டங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து

English Summary: Coronavirus vaccine is available for over 12 years of age - one or two days allowed!
Published on: 12 July 2021, 10:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now