Health & Lifestyle

Thursday, 19 January 2023 07:41 PM , by: T. Vigneshwaran

Dryfruit

இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் பேரிச்சம்பழம் உண்பதை பார்த்திருப்போம். ஆனால் அதை தவிரவும் பல நோய்களை போக்கும் வல்லமை பேரிச்சம்பழங்களுக்கு உண்டு. அதை அப்படியே சாப்பிடுவதை விட பாலில் ஊற வைத்து எடுத்து கொண்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும். அந்த பாலை அருந்தும்போது அளவில்லா பலன்களை அனுபவிக்கலாம்.

பேரிச்சம்பழத்துடன் பாலும் தேனும்!

பேரிச்சம்பழத்தை ஊற போட்ட பாலை தேன் விட்டு அருந்தும்போது நாள்பட்ட இருமல் குணமாகும். கொதிக்கும் பாலில் சில பேரிச்சம் பழங்களை போட்டு மிதமான சூட்டில் அருந்தினால் தொண்டை இதமாகும். அதிகமான இதயத் துடிப்பு, இதய பிரச்சனை கூட சரியாகும்.

மூன்று நோய்களுக்கு ஒரே தீர்வு!

இரத்த சோகை, நரம்பு சார்ந்த நோய், விறைப்புத்தன்மை குறைபாட்டை சரிசெய்ய பேரிச்சம் பழத்திற்கு சக்தி உண்டு. முழு நாள் அல்லது இரவு மட்டும் பேரிச்சையை பாலில் ஊற வையுங்கள். அதனை மறுநாள் அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும். வாசனையும், நிறமும் வேண்டுமெனில் குங்குமப்பூ, ஏலக்காய், இஞ்சி போடலாம்.

தூக்கத்திற்கு உதவும்!

தூக்கம் இல்லாமல் வேதனைப்படுபவர்கள் வெந்நீரில் பேரிச்சம் பழத்தை போட்டு குடிக்கலாம்.

குணமாகும் மலச்சிக்கல்!

பேரிச்சம் பழத்தை 500 மிலி பாலில் போட்டு கொதிக்க வையுங்கள். இதனை காலை வெறும் வயிற்றில் அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும். காலை உணவுடன் சில பேரிச்சம் பழங்களை உண்பது நல்லது.

கட்டுக்குள் வரும் உயர் இரத்த அழுத்தம்

கொஞ்சம் பேரிச்சம் பழங்களை பாலில் ஊற வைத்து காலை உணவுக்கு அரை மணி நேரம் முன்பு உண்ணுங்கள். மூன்று வாரம் இப்படி காலை வேளை செய்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். பிரசவித்த பெண்கள் பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழங்களை தொடர்ந்து உண்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது. தாய்ப்பால் சுரப்பும் அதிகமாகும்.

மேலும் படிக்க:

குறைந்த விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

100 யூனிட் இலவச மின்சாரம் இல்லை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)