சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 19 September, 2019 4:56 PM IST
cassia auriculata

சித்த மருத்துவம் கூறும்  நீரிழிவு நோய்

நோய் வரும் முன்பே மருந்தை கண்டுபிடித்தவர்கள் நம் சித்தர்கள். அவர்களின் ஆழ்ந்த ஞானத்தை கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வரவிருக்கும் பிணியயையும், அறிகுறிகளையும், பிணிக்கான தீர்வையும் கொடுத்து சென்றுள்ளனர். இன்று நாம் வைத்த பெயர் தான் சர்க்கரை நோய், நீரிழிவு நோய். சித்தர்கள் வைத்த பெயர் மது மேக நோய்.  

ஒரு 30 வருடங்களுக்கு முன்னால் வரை வயோதிகர்களை மட்டுமே பாதித்த இந்த நோய் இன்று அனைவரையும் தாக்கி இருப்பது மிகவும் வருந்த தக்கது. முறையற்ற, ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் இன்று நம்மில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்காக உள்ளது. எனினும் சித்த மருத்துவத்தில் இதற்கு நிரந்தரமான தீர்வு இருப்பதாக கூறப்படுகிறது.

சர்க்கரை நோய்

முதலில் நாம் சர்க்கரை நோய் என்றால் என்ன? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உடலில் உள்ள சத்தை ஆற்றலாக  மாற்றுவதற்கு கணையத்திலிருந்து கணைய நீர் சுரக்கிறது. அவ்வாறு சுரந்த கணைய நீர் சீராக  ஆற்றலாக மாற்றாமல் அது சர்க்கரைச் சத்தாகவே ரத்தத்துடன் கலந்து விடுவதால் இரத்தத்தில் உள்ள  சர்க்கரையின் அளவு அதிகரித்து விடுகிறது. இதன் காரணமாக சர்க்கரை நோய் உருவாகிறது.

நோயின் அறிகுறிகள்

சித்தர்கள் மது மேக நோயிக்கான அறிகுறிகளை குறிப்பிட்டுள்ளனர்.

“கோதையார் களவின் போதை
கொழுத்த மீனிறைச்சி போதை
பாலுடன் நெய்யும்
பரிவுடன் உண்பீராகில்
வருமே பிணி”

தொடர்ந்து கொழுப்புச் சத்து  கொண்ட உணவை உட்கொண்டு, உடல் உழைப்பு இல்லாது இருந்தால் இந்நோய் உண்டாகும் எனவும், இதனால் பாலுறவில் நாட்டம் இருக்காது என குறிப்பிடப் பட்டுள்ளது.

நீரிழிவு நோய் ஏற்பட்டால் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். சித்தர்கள் உடலில் தோன்றும் நோயினை வாதம், பித்தம், கபம் என மூன்று வகைகளில் பிரித்துள்ளனர். அவரவர்களின் உடற்கூற்றுக்கு ஏற்ப பாதிப்பு ஏற்படும் என்றுள்ளார். 

மது மேக நோய்க்கான தீர்வு

தங்கம் எனவே சடத்திற்குக் காந்திதரும்
மங்காத நீரை வறட்சிகளை-அங்கத்தாம்
மாவைக்கற் றாழை மணத்தை அகற்றிவிடும்
பூவைச்சேர் ஆவாரம் பூ - அகத்தியர் குணவாகடம்

பொருள் - நீரிழிவு, வறட்சி, உடலின் வியர்வை நாற்றம் இவற்றைப் போக்கும். உடலுக்கு பொற்சாயலைக் கொடுக்கும்.

சர்க்கரை நோயை  தடுக்க பல மூலிகை மருந்துகளை சித்தர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவற்றில், பொன்னாவாரை பூ என்ற ஆவாரம் பூ முதன்மையானதாக கருதப்படுகிறது. பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையுடைய ஆவாரம் பூவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. வெளிப் பூசவும், உள் பயன்பாட்டிற்கும் பயன் படுத்தலாம். இந்த மரத்தின் எல்லா பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை. இதன் இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் என அனைத்தும் மருத்து தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆவாரம் பூ கஷாயம்

பொன்னாவாரை பூ - 10 கிராம்
மிளகு - 5
திப்பிலி - 3
சுக்கு - 1 துண்டு
சிற்றரத்தை - 1 துண்டு

மேலே கொடுத்துள்ளவற்றை உலர்த்தி பொடியாக்கி ஒரு குவளை நீரில் போட்டு பாதியாக வற்றும் வரை  காய்ச்சி காலை வேளைகளில் வெறும் வயற்றில் அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதுடன், கை கால் மதமதப்பு, உடல் அசதி, மயக்கம், படபடப்பு, கண் பார்வைக் கோளாறு முதலியவை படிப்படியாகக் மட்டுப்படும்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Do The Avarampoo helps to regulate your blood sugar levels? What siddha medicine says?
Published on: 19 September 2019, 04:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now