வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 September, 2024 7:44 AM IST
benefits of eating basil on an empty stomach

துளசி இலைகளில் சக்திவாய்ந்த  பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன எனவேதான் இதனை புனித துளசி என்றும் அழைக்கப்படுகிறது. துளசியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்ததும் இயற்கை பூச்சிவிரட்டியுமான துளசி செடி பொதுவாகவே பரவலான வீடுகளில் வளர்க்கப்படுகிறது. இந்த துளசி செடிகளில் நம் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. எளிதாக கிடைக்ககூடிய இந்த துளசி செடியின் இலைகளை தினமும் காலையில் உட்கொண்டு வருவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நம்மை பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

தினமும் காலையில் துளசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 

செரிமானத்தை மேம்படுத்துகிறது

தற்போதைய துரித உணவு அதிகரிப்பு காரணமாக நம்மில் பலருக்கு செரிமா பிரச்சைனைகள் ஏற்படுவது வழக்கமான ஓன்றாக இருந்து வருகிறது. துளசியை வெறும் வயிற்றில் உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

அவ்வப்போது ஏற்படும் வயிற்று எரிச்சல், வயிறு உப்பிசம், மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது. மேலும் இது வயிற்று வலியை ஆற்றக்கூடிய அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.

மன அழுத்தத்தை குறைக்கிறது

மன அழுத்தம் என்பது தற்போது எல்லா தரப்பு வயதினரிடமும் பார்க்கப்படும் முக்கிய பிரச்சையாக இருந்து வருகிறது. துளசி மன அழுத்தத்தை சமாளிக்க உடலுக்கு உதவுகிறது. இதை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தவும், பதட்டத்தை குறைக்கவும், உங்கள் மனநிலையை மேம்படுத்தவும் உதவும். இது உங்கள் மனதிற்கு இயற்கையான உற்சாகத்தை அளிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது்.

துளசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. துளசியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (antioxidants )ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன, நோய்த்தொற்றுகளுக்கு எதிராக உங்கள் உடலின் பாதுகாப்பை பலப்படுத்துகின்றன. அலர்ஜி, சளி மற்றும் காய்ச்சலின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது.

ஒரு இயற்கை நச்சு நீக்கி

துளசி என்பது இயற்கையான நச்சு நீக்கியாகும், இது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுகளை சுத்தப்படுத்த உதவுகிறது. இது கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கிறது மற்றும் ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. துளசியுடன் உங்கள் நாளைத் தொடங்குவது உங்கள் உடலுக்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தரும்.

துளசியை எப்படி சாப்பிடுவது?

இது மிகவும் பாரம்பரியமான முறையாகும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் சில புதிய துளசி இலைகளை மென்று சாப்பிடலாம்.

துளசி தேநீர்

ஒரு சில துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி அதனை சூடாக குடித்து வரலாம். இது உங்கள் தொண்டையை இதமாக  வைத்திருப்பதோடு, உங்கள் மனதையும் ரிலாக்ஸ் செய்கிறது.

Read more 

நாள்பட்ட நோய்களா? இதன் குறைபாடாக இருக்கலாம்... இப்போவே செக் செய்யுங்கள்!

பீட்ரூட் சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்- வேர் முதல் நுனி வரை அனைத்திலும் பலன்!

Plum | பருவ மழைக்கால நோய்களை தடுக்க ஒரு கப் "நாவல் பழம்" போதும்!

English Summary: Do you know the benefits of eating basil on an empty stomach?
Published on: 02 September 2024, 07:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now