மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 August, 2019 4:10 PM IST

பொதுவாக நாம் உண்ணும் உணவின் சுவையை அறிய உதவுவதும் நமது நாக்குதான். அறுசுவைகளான இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளை நாம் உணர்வதற்கு நாக்கு பயன்படுகிறது. தொடர்ந்து உணவுகளை உட்கொள்ளும் போது நாக்கினில்  பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற  தொற்றுக் கிருமிகள் உருவாக வாய்ப்புண்டு. எனவே நாக்கை நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நாக்கு என்பது நமது ஆரோக்கியத்தை காட்டும் கண்ணாடி என்றே கூறலாம்.இதன் காரணமாகத்தான் மருத்துவர்கள் நாக்கினையும் பரிசோதிக்கிறார்கள். நாக்கின் நிறத்தை கொண்டு நம் உடலில் தோன்றும் வியாதிகளை எளிதில் கண்டுப்பிடித்து விடலாம். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுடன் தொடர்புடையது. அதே போன்று சிலருக்கு நாக்கில் கரும்புள்ளிகள் தோன்றும்.

நாக்கின் நிறமும் நோயின் அறிகுறியும்

  • ரோஸ் நிறம்  - ஆரோக்கியத்தை குறிக்கும்
  • இளம்சிவப்பு நிறம் - இதயம் மற்றும் ரத்த சம்பந்தமான நோய்
  • அடர் சிவப்பு நிறம் - தொற்றுநோய் மற்றும் அலர்ஜி
  • நீல நிறம் - சிறுநீரகம் பாதிப்பு
  • வெளிர் வெள்ளை நிறம் - நோய் தோற்று
  • சிமெண்ட் நிறம் - செரிமானம் மற்றும் மூலநோய்
  • மஞசள் நிறம் - வயிறு அல்லது கல்லீரல், மஞ்சள் காமாலை
  • காபி நிறப் படிவு - நுரையீரல் பாதிப்பு

ஆயுர்வேதம் சொல்லும் வாய் சுத்தம்

  • காலை, மாலை என இருவேளையும் பற்கள் மற்றும் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.
  • ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். இது வாயில் உள்ள அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்யும்.
  • வாரம் ஒரு முறையேனும் வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கும் போது நுண்கிருமிகளை எளிதில் அழித்து பூஞ்சைகள் உருவாகுவதை தடுக்கும்.
  • அதிகச் சூடான மற்றும் அதிகக் குளிரிச்சியான பதார்த்தங்களை சாப்பிட கூடாது.
  • மிதமான சூடான நீரில் கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
  • சாப்பாட்டுக்குப் பிறகு வாய்க் கொப்பளிப்பதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

இந்த எளிய முறைகளை வழக்கமாக்கி கொண்டால்  பற்கள் மற்றும் நாக்கு அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Do you know? Your Tongue Reveals Your Health Problem: Dentist Easily Identify Symptoms and Signs
Published on: 23 August 2019, 04:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now