மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 January, 2022 12:11 PM IST
Credit : Times of India

பால் குடிப்பதால் சர்க்கரை கோளாறு வரும் என்று பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்தது. இது முற்றிலும் தவறான கருத்து என்று, சமீபத்தில் நடந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பாலில் உள்ள சத்துக்கள்

பாலில் உள்ள 'லாக்டோஸ் (Lactos)' எனப்படும் சர்க்கரையை செரிக்கும் திறன், அரிதாக சிலருக்கு இல்லாமல் இருக்கலாம். இந்த லாக்டோஸ் மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். பாலில் உள்ள புரதச் சத்து தசைகளின் வளர்ச்சிக்கும், கால்சியம் (Calcium) சத்து எலும்புகளுக்கும் முக்கியம்.
இது தவிர விட்டமின் ஏ, டி, பாஸ்பரஸ், பொட்டாசியம், ரிபோபுளோவின் போன்ற பல நுண்ணுாட்ட சத்துக்கள் உள்ளன.

ஆய்வு

பால் குடிப்பதால் சர்க்கரை கோளாறு வரும் என்று சொல்வதற்கு மருத்துவ, அறிவியல் ரீதியில் எந்த ஆதாரமும் இல்லை. நம் நாட்டில் இது வரை செய்த ஆய்வில், தினமும் பால் அருந்துவது, குறுகிய, நீண்ட கால உடல் ஆரோக்கியத்தை தருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சர்க்கரை கோளாறுக்கு எதிராக, பால் பாதுகாப்பு தருவதாக, 'சென்னை அர்பன் ரூரல் எபிடெர்மாலஜி' - சி.யு.ஆர்.இ.எஸ்., ஆய்வு கூறுகிறது. 21 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வில், பால் மற்றும் பால் பொருட்களை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு, சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்த (High Blood Pressure) பிரச்னைகள் வருவது மிகக் குறைவு. உடல் உள்ளுறுப்பு செயல்பாட்டில் கோளாறு வருவதில்லை என்று தெரிகிறது.

தாய்ப்பால்

தாய்ப்பால் குடிப்பதால் சர்க்கரை கோளாறு வரும் என்ற ஆய்வுகள் அனைத்தும், மேற்கத்திய நாடுகளில் செய்யப்பட்டவை. பல வெளிநாடுகளில், பிறந்ததும் குழந்தைக்கு தாய்ப்பால் தரும் பழக்கம் இல்லை. புட்டி பால் தருகின்றனர். இதனால், இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) குறைவாக ஆகி விடுகிறது. எளிதாக தொற்று ஏற்படுகிறது. தாய்ப்பால் தராமல் இருப்பதே பலவித நோய்கள் வரக் காரணம். பால் குடிப்பது தான் உடல் கோளாறுக்கு காரணம் என்று தவறாக புரிந்து கொள்கின்றனர்.

காரணங்கள்

குழந்தை பருவத்தில் இருந்தே, பதப்படுத்திய உணவுகளை அதிகம் சாப்பிட்டு, அதிக உடல் எடையுடன் இருப்பது. போதிய உடற்பயிற்சி (Excercise) இல்லாதது, பாலிஷ் செய்யப்பட்ட அரிசி மற்றும் கோதுமையில் இருந்து, அதிக கார்போஹைட்ரேட்

சாப்பிடுவதன் விளைவால், இன்சுலின் (Insulin) சுரப்பதில் சிக்கல், நீர்க் கட்டிகள் உருவாவது என, பல பிரச்னைகள் குழந்தை பருவத்திலேயே ஆரம்பித்து விடுகின்றன.

டாக்டர் வி.மோகன்,
தலைவர்,
மோகன்ஸ் டயாபடிக் மையம்,
சென்னை

மேலும் படிக்க

நார்த்தங்காயில் இருக்கும் நோய் எதிர்ப்பு பலன்கள்

English Summary: Drinking milk does not cause diabetes! Information in the study!
Published on: 30 June 2021, 09:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now