Health & Lifestyle

Tuesday, 11 January 2022 01:48 PM , by: R. Balakrishnan

Elderly should not alone

அறுபது வயதை கடந்த, இணைநோய் உள்ள முதியவர்கள் வீடுகளில் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளக் கூடாது. உடனடியாக மருத்துவமனைக்கு வந்து ஆலோசனை பெற வேண்டும்' என, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இரண்டு தவணை தடுப்பூசி (Two Dose Vaccine)

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து வருகிறது. இதில், 'இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், இணைநோய் உள்ளவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், 60 வயதுக்கு மேற்பட்ட, இணைநோய் உள்ளவர்களை கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.

சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி, சோர்வு ஏற்பட்டால், உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்துதல் மேற்கண்ட வயதினருக்கு உகந்தது அல்ல. எனவே, குடும்பத்தினர் கவனமுடன் இருந்து, முதியோர்களை பாதுகாக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீட்டுத்தனிமை (Alone in home)

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வீட்டுத்தனிமையில் இருந்த சிலர் அலட்சியமாக இருந்ததால், குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கும் தொற்று பரவியுள்ளது. 60 வயதை கடந்தவருக்கு பாதிப்பு ஏற்படும்போது, அவரை மீட்டுக்கொண்டு வர, உயிர்காக்க சிரமங்கள் ஏற்படுவதால், வீட்டுத்தனிமையில் வைத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

மேலும் படிக்க

சாகசம் நிகழ்த்திய மூதாட்டி: அந்தரத்தில் கம்பியில் பயணம்!

மத்திய அரசு வெளியிட்டுள்ள பூஸ்டர் டோஸ் பற்றிய முக்கிய தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)