நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 November, 2021 10:15 AM IST

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய விதிக்கப்பட்டிருந்தக் காலக்கெடுவை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

6.91 லட்சம் ஏக்கர் (6.91 lakh acres)

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை, முழு வீச்சில் காப்பீடு செய்து வருகின்றனர். இதுவரை, 5.65 லட்சம் விவசாயிகள் பதிவு செய்து, 6.91 லட்சம் ஏக்கர் பயிர் பரப்பு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நவ.15

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில், சம்பா பருவத்தில், நெல் பயிரை காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மழையால் பாதிப்பு (Damage by rain)

இதனால் காப்பீடு செய்யும் பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டிய நிலையில், ஆழ்ந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், கனமழை பெய்து, பயிர்களை நாசம் செய்தது. இதனால் விவசாயிகள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர்.
இருப்பினும், சம்பா, தாளடி போன்ற பயிர்களுக்கான காப்பீடு செய்வதற்கான

கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.எனவே விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்றுத் தமிழக அரசு பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்கதை

காலக்கெடுவை நீட்டிப்பதாக அறிவித்துள்ள தமிழக அரசு, தேதி குறிப்பிடப்பட வில்லை. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குறிப்பாக புயல், வெள்ளம் போன்றக் காலங்களில் எதிர்பாராத வகையில் பயிர் பாதிக்கப்படுவதுத் தொடர்கதையாகி வருகிறது.

பெரும் இழப்பு 

அதிலும் கணக்கில்லாமல் கொட்டித் தீர்த்து வரும் மழையால், டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாயின. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய இயற்கை சீற்றங்களின்போது ஏற்படும் இழப்பில் இருந்து விவசாயிகள் தப்பித்துக்கொள்ள ஏதுவாக, பயிர்க்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

கொரோனா தடுப்பூசி போடவில்லையா? - இனி ரேஷன் பொருட்கள், கியாஸ், பெட்ரோல் கிடையாது!

புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

English Summary: Extension of crop insurance deadline - Chief Minister's order!
Published on: 12 November 2021, 10:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now