மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 July, 2021 9:30 AM IST
Credit: Maalaimalar

கொரோனாக் காலத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள்,மூலிகை இலையினால் ஆன முகக்கவசத்தைப் பயன்படுத்துகின்றனர்.

கொரோனாக் கோரத்தாண்டவம் (Corona claim)

உலக நாடுகளை உலுக்கியது மட்டுமல்லாமல், இந்தியாவிலும் தமது 2-வது அலையை விஸ்தரிக்கவிட்டுக் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது கொரோனா.

ஊரடங்கு (Curfew)

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏதுவாக இரவு நேர ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டது.

முகக்கவசம் கட்டாயம் (The mask is mandatory)

அதேநேரத்தில் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது அனைவரும் முகக்கவசம் அணிவதுக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அலட்சியம் (Indifference)

இருப்பினும், நம்முள் சிலர் பின் விளைவுகளைச் சிந்திக்காமல், முகக்கவசம் அணிவதைச் சுமையாகக் கருதுவதால், அலட்சியமாக முகக்கவசம் அணியாமல் திரிகின்றனர்.

பழங்குடியினரின் பக்குவம் (Maturity of the tribe)

ஆனால், காட்டுக்குள் இயற்கையோடு ஒன்றி வாழும் பழங்குடியினரோ, மூலிகை இலையை முக கவசமாக அணிந்து வலம் வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பண்ணைக்காடு வடகரைபாறை மக்களிடம்தான் இந்த புது வழக்கம் உள்ளது.

கொரோனா இல்லை (No corona)

இங்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றபோதிலும், முக கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பழங்குடியின மக்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளனர். இருப்பினும் முகக்கவசம் சற்று ஆரோக்கியம் நிறைந்ததாகவும், செலவில்லாததாகவும் இருக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் சிந்தித்தனர். இதன் அடிப்படையில், மூலிலை இலை முகக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜலதோஷத்திற்கு மருந்து (Remedy for colds)

வனப்பகுதியில் உள்ள பிசிலாம் மரத்தின் இலை, கிருமிகளை நம்மிடம் அண்ட விடாது என முன்னோர்களின் அறிவுரை. குறிப்பாகக் குழந்தைகளின் ஜலதோஷ பிரச்னைக்கு, இந்த இலை மற்றும் வெங்காயத்தை மாலையாக கோர்த்து அணிவது வழக்கம். இதன் மூலம் ஜலதோஷம் விரைவில் நீங்கிவிடுகிறது.

நுரையீரல் (Lung)

இதை அணிவதால், இந்த இலையின் மணம் நுரையீரல், சுவாசப் பாதைகளை துாய்மையாகப் பராமரிக்கும் என்பதால், வெளியில் செல்லும்போது இதை முக கவசமாக அணிகிறார்கள்.

இவ்வாறு, பழங்குடியின மக்கள் கூறுகின்றனர். இந்த முறையை மற்றவர்களும் பயன்படுத்தினால், காசு செலவும் ஆகாது, ஆரோக்கியமும் உறுதி செய்யப்படும்.

மேலும் படிக்க...

கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!

2020 ஆம் ஆண்டில் 4-இல் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை: யுனிசெப் தகவல்

English Summary: Face mask with herb leaves: a different endeavor of the hill people!
Published on: 09 July 2021, 09:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now