இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 December, 2021 7:49 AM IST

சோப்பு, தண்ணீர், ஆடை என எல்லாவற்றாலும் சருமப் பிரச்னை உருவாக வாய்ப்பு உள்ளது. அதிலும் சென்ஸிடிவ் ஸ்கின் எனப்படும் சருமத்திற்கு, எப்போது வேண்டுமானாலும் இந்த சருமப் பிரச்னை ஏற்படலாம்.

சருமப் பிரச்னை (Skin problem)

அதிலும் குறிப்பாகக் குளிர்காலம் வந்துவிட்டால், சருமப் பிரச்னைகளும் தாறுமாறாகத் தலைதூக்க ஆரம்பித்துவிடும். அவ்வாறு அவதிப்படுவரா? நீங்கள். அப்படியானால், இந்தத் தகவல் உங்களுக்குதான்.

ரசாயனங்கள் கொண்ட சரும பராமரிப்பு பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், சருமம் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தழும்புகள், சுருக்கங்கள் மற்றும் முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு எளிதாகக் கிடைக்கும் இந்த 6 இலைகள் போதும். செலவும் மிக மிகக் குறைவுதான்.

வெந்தயக் கீரை (Fenugreek)

  • முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை நீக்க வெந்தய கீரையை பயன்படுத்தலாம்.

  • வெந்தய இலைகளை அரைத்து அதில் 2 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும்.

  • முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊற விடவும்.

  • அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவவும்.

புதினா (Mint)

  • புதினா இலைகளில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.

  • இதன் இலைகளை அரைத்து வெள்ளரிச்சாறு மற்றும் தேன் கலந்து தடவவும்.

  • முகத்தில்பூசி 15 நிமிடங்கள் ஊற விடவும்.

 

  • அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

துளசி (Basil)

  • துளசி இலைகளை அரைக்கவும்.

  • அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

  • இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவும்.

  • பிறகு முகத்தை சுத்தமானக் குளிர்ந்த நீரில் கழுவவும்.

கறிவேப்பிலை (Curry leaves)

  • கறிவேப்பிலை ஃபேஸ் பேக் உங்கள் சருமத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • இதற்கு முதலில் கறிவேப்பிலை பேஸ்ட்டை தயார் செய்து, அதில் சிறிது முல்தானி மிட்டி மற்றும் தேன் சேர்க்கவும்.

  • முகத்தில் பூசி 15 நிமிடங்கள் ஊற விடவும்.

  • அதன் பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவவும்.

கொத்தமல்லி (Coriander)

  • கொத்தமல்லி இலைகளை அரைத்து பேஸ்ட் தயார் செய்து, அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

  • முகத்தில் பூசி சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் ஊற விடவும். இது முகப்பரு மற்றும் முகப்பரு பிரச்சனையை நீக்கும்.

வேப்ப இலை (Neem)

  • வேப்ப இலையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

  • எந்த வகையானத் தொற்றுநோயையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது வேம்பு.

  • 10 முதல் 15 வேப்ப இலைகளை எடுத்து பேஸ்ட் தயாரித்து ரோஸ் வாட்டரில் கலந்து தடவவும்.

  • முகத்தில் பூசி 15 நிமிடங்கள் ஊற விடவும். அதன் பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவவும்.

  • எனவே இந்த 6 இலைகளைப் பயன்படுத்தி சருமப் பிரச்னைகளுக்கு குட்பை சொல்வோம்.

மேலும் படிக்க...

அந்த விஷயத்திற்கு ஏற்ற இதமானப் பானங்கள்!

இதயப் பாதிப்புகளைக் குறைக்க இரவு 10 மணி தூக்கமே சிறந்தது!

எச்சரிக்கை!

English Summary: Have skin problems? These 6 leaves are enough
Published on: 06 December 2021, 07:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now