15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 27 November, 2018 5:50 PM IST

நல்ல செரிமானத்தைப் பெற

காராமணியானது நார்ச்சத்தினை அதிகம் கொண்டுள்ளது. எனவே செரிமானத் தன்மையை மேம்படுத்துவதுடன் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமானப் பிரச்சினைகளையும் போக்குகிறது.

இதயநலத்தினை மேம்படுத்த

காராமணியில் காணப்படும் விட்டமின் பி1(தயாமின்) இதயநலத்தின் மேம்பட்டிற்கு பெரிதும் உதவுகிறது. இந்த விட்டமின் இதய செயலிழப்பை தடைசெய்கிறது.

மேலும் இப்பயறில் காணப்படும் பிளவனாய்டுகள் இதயம் நன்றாச் செயல்பட உதவுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்தானது உடலில் கொலஸ்ட்ரால் சேருவதைத் தடைசெய்வதோடு தமனிகளில் அடைப்புகள் ஏற்படா வண்ணம் உதவுகிறது.

நச்சு நீக்கம்

காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன. மேலும் இவை ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடைசெய்கின்றன.

இதனால் செல்களின் பிறழ்சி தடுக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இதில் காணப்படும் விட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

நல்ல தூக்கத்தினைப் பெற

காராமணியில் மெக்னீசியம் மற்றும் டிரிப்தோபன் குறிப்பிட்டளவு காணப்படுகிறது. மெக்னீசியம் மற்றும் டிரிப்தோபன் உடலின் சோர்வினைப் போக்கி நல்ல தூக்கம் ஏற்பட வழிவகை செய்கிறது.

தூக்கக் குறைபாடு உள்ளவர்கள் தூக்கச் செல்வதிற்கு சிறிது நேரத்திற்கு முன்பு காராமணியை உண்டால் நல்ல தூக்கத்தினைப் பெறலாம்.

அனீமியை தடுக்க

இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டால் அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும். காராமணியில் உள்ள இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து அனீமியைத் தடைசெய்கிறது.

இரத்த சிவப்பணுக்களின் அதிகரிப்பால் ஆக்ஸினை உடைய இரத்தம் உடல்உறுப்புகளுக்கு பாய்வதால் உடல் உறுப்புக்கள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்குகின்றன.

ஆரோக்கியமான உடல்எடை இழப்பிற்கு

காராமணியானது குறைந்தளவு எரிசக்தியையும், கொலஸ்ட்ராலையும் கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்தானது நல்ல செரிமானத்தைத் தூண்டுவதுடன் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகிறது.

இதனால் இடைவேளை உணவு உண்பது தடுக்கப்படுகிறது. இதனால் காராமணியை உண்டு ஆரோக்கியமான உடல்இழப்பினைப் பெறலாம்.

சரும பாதுகாப்பிற்கு

காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள், விட்டமின் சி, புரதம் ஆகியவை சருமம் மேம்பாட்டிற்கு உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் சருமம் முதிர்வதை தடைசெய்கிறது.

சருமம் எரிச்சல் மற்றும் புறஊதாக்கதிர் வீச்சு ஆகியவற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இதில் காணப்படும் புரதச்சத்தானது பழுதான செல்களை சரிசெய்வதோடு புதிய திசுக்கள் வளரவும் உதவுகிறது. மேலும் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து சரும இளமையைப் பாதுகாக்கலாம்.

சர்க்கரை நோயினை நிர்வகிக்க

காராமணியில் காணப்படும் மெக்னீசியமானது கார்போஹைட்ரேடின் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் இதனை உண்ணும்போது இன்சுலின் சுரப்பினை சீராக்குகிறது. மேலும் இது உடல்சோர்வினை நீக்கி நல்ல தூக்கத்திற்கும் வழிவகை செய்கிறது.

எலும்புகளைப் பாதுகாக்க

காராமணியில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பில் உதவுகிறது. எனவே இதனை உண்டு எலும்புகளைப் பாதுகாக்கலாம்.

அதிக அளவு காராமணியை உட்கொள்ளும்போது அது வாயுவைப் பெருக்கும். இதனால் வயிற்று வலி, வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.

காராமணியை வாங்கும்போது ஒரே சீரான நிறத்துடன் துளைகள் இல்லாத உடையாத பயறுகளைத் தேர்வு செய்யவும்.

காராமணியானது சூப்புகள், சாலட்டுகள், கேக்குகள், இனிப்புகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

English Summary: Health benefits of Cowpea
Published on: 27 November 2018, 05:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now