மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 October, 2018 4:22 PM IST

முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அதிலும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது இன்னும் சிறப்பானது. முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை காலை வேளையில் சாப்பிடக் கொடுத்தால், அவர்களின் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

முட்டையில் உள்ள சத்துக்கள்

  1. புரத சத்து அதிகரிக்கும்

மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு புரத சத்து மிகவும் அவசியம். ஒரு முட்டையில் 6 கிராம் புரதம் இருப்பதால் முட்டை சாப்பிடுவது மிகுந்த நன்மை அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் முட்டையில் நிறைந்திருப்பதால், எலும்புகளை வலுப்பெறச் செய்கிறது.

  1. நல்ல கொழுப்பை அதிகரிக்கும்

முட்டை சாப்பிடுவதன் மூலம், உடலில் நல்ல கொழுப்புகள் அதிகரிக்கும். இதனால், வலிப்பு நோய், இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம்.

  1. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் (Omega 3- Fatty Acid)

மீன்களில் உள்ளது போல், முட்டையில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. அதனால், தினமும் முட்டை சாப்பிடுவது, கண் பார்வைக்கும், மூளை செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது. மீன் பிடிக்காதவர்கள், முட்டை சாப்பிடுவதன் மூலம் Omega  3 Fatty Acid -ன் நன்மைகளைப் பெறலாம்.

  1. கண்களுக்கு மிகவும் நல்லது

Lutein மற்றும் Zeaxanthin என்ற மிக முக்கியமான இரண்டு அமினோ அமிலங்கள் முட்டையில் இருப்பதால், கண்புரை போன்ற கண் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இதுமட்டுமல்லாமல், முட்டையில் வைட்டமின் A சத்து இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது.

5. மூளைக்கு மிகவும் நல்லது

நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமென்றால் மூளையும் ஆரோகியமாக இருக்க வேண்டும். முட்டையில் மூளைக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல் அதிக அளவில் இருப்பதால், நமது மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. 

  1. எலும்புகளை வலுப்படுத்த

முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமையை அதிகரிக்கச் செய்கிறது.

 

  1. உடலுக்கு தேவையான தாதுக்கள் அதிகமாக இருக்கிறது

முட்டை சாப்பிடுவதால், இரும்பு, சிங்க் , பாஸ்பரஸ் முதலிய தாதுக்கள் நம் உடலுக்கு கிடைக்கிறது. இரும்புச்சத்து, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. சிங்க், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களை உடலுக்கு தேவையான சக்தியாக மாற்றுகிறது. இதுபோன்ற தாதுக்கள்  உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழிவகுக்கிறது.


8.உடல் எடையைக் கட்டுப்படுத்த

முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரி ஆகியவை உள்ளது. எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும். முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்கிறது. எனவே நம் அன்றாட உணவில் முட்டையை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

  1. ஆரோக்கியமான முடி மற்றும் நகம்

தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், நகம் மற்றும் முடியானது ஆரோக்கியமாக இருக்கும்.

  1. கோலைன்

எதிலும் கிடைக்காத கோலைன் என்னும் இன்றியமையாத சத்தானது, முட்டையில் தான் அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த கோலைனானது செல் மென்படலங்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது மற்றும் மூளையில் சமிக்ஞை மூலக்கூறுகளை உற்பத்தி செய்து, மற்ற செயல்பாடுகளை சீராக செயல்பட மிகவும் இன்றியமையாதது.

  1. கர்ப்பிணிகளுக்கு

பெண்கள் கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு வேண்டிய சத்தானது கிடைத்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.



English Summary: Health benefits of Egg
Published on: 13 October 2018, 04:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now