மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 December, 2018 2:39 PM IST

உயர்இரத்த அழுத்தத்திற்கு

இப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுஉப்பான பொட்டாசியம் போன்றவை உயர்இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன.

இவை உடலில் கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைப்பதோடு சீரான இரத்த ஓட்டத்தை உண்டாக்கி இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

நோய்எதிர்ப்பு ஆற்றலைப் பெற

இப்பழத்தில் உள்ள விட்டமின் சி-யானது உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை வழங்கி சளி உள்ளிட்ட தொற்றுநோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

இப்பழத்தில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பானது உடலில் காயம் ஏற்படும்போது வைரஸ், பாகடீரியா, பூஞ்சை தொற்றுதலிருந்து பாதுகாத்து காயங்களை விரைந்து ஆற்றுகிறது.

கொடை ஆரஞ்சு செரிமானம் மற்றும் நரம்பு மண்டலங்களை தொற்றுகிருமிகளிடமிருந்து பாதுகாத்து பிடிப்புகள் மற்றும் வாந்தி ஆகியவற்றை தடுக்கிறது. மேலும் இப்பழம் உடலில் உள்ள நச்சுக்கிருமிகளை வெளியேற்றி இரத்தத்தினை சுத்தம் செய்கிறது.

எலும்புகளின் பலத்திற்கு

நம்முடைய பற்கள் மற்றும் எலும்புகள் ஆகியவை கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் கலவையான ஹைட்ரோக்சிபைடிட் என்பதன் மூலம் உருவாகின்றன.

மெக்னீசியமானது ஹைட்ரோக்சிபைடிட் உருவாக்கத்திற்கு தேவையான நொதிகளை சுரக்கச் செய்வதோடு அவை சரியான அளவில் செயல்படவும் தூண்டுகிறது.

இதனால் இந்த தாதுஉப்புகள் அடங்கிய உணவினை உணவில் எடுத்துக் கொள்வதால் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட எலும்பு நோய்களைத் தவிர்க்கலாம்.

கால்சியம், மெக்னீயம், பாஸ்பரஸ் உள்ள கொடை ஆரஞ்சினை உணவில் சேர்த்து பலமான எலும்புகளைப் பெறலாம்.

சருமப்பாதுகாப்பிற்கு

இப்பழத்தில் உள்ள விட்டமின் சி-யின் காரணமாக இப்பழத்தினை உட்கொள்வதாலும், சருமத்தில் தடவிக் கொள்வதாலும் சருமத்திற்கு பாதுகாப்பினை வழங்குகிறது.

இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது சருமத்தினை பளபளக்கச் செய்வதோடு சருமத்தினை வளவளபாக்கி மேம்படுத்துகிறது.

இப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் சருமத்தினை புறஊதாக்கதிர்கள், சூரிய ஒளி, வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீரேடில்களின் சேயல்பாடுகள் ஆகியவற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

புற்றுநோயைத் தடுக்க

கொடை ஆரஞ்சில் உள்ள கரோடீனாய்டுகள் மற்றும் விட்டமின் ஏ கல்லீரல் புற்றுநோயைத் தடைசெய்கின்றன.

மஞ்சள் காமாலை நோயால் பாதிப்படைந்தவர்கள் இப்பழச்சாறினை அடிக்கடி உண்ணும்போது அதில் உள்ள கிரிப்டோ சாந்தின் கல்லீரல் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதோடு கல்லீரல் புற்றுநோயையும் தடைசெய்கிறது.

இப்பழத்தில் காணப்படும் லிமோனின் பொருளானது புற்றுச்செல்களின் வளர்ச்சியை தடுக்கும் பண்பினைப் பெற்றுள்ளது.

இப்பழத்தின் தோலானது தோல் புற்றுநோயினை தடை செய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு புற்றுநோயினைத் தடுக்கலாம்.

நல்ல செரிமானத்திற்கு

கொடை ஆரஞ்சானது கரையும், கரையாத நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. இவை உணவினை நன்கு செரிக்கச் செய்வதோடு உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றுகிறது.

மேலும் இந்த நார்ச்சத்துகள் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சவும் துணை புரிகிறது. இதனால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானப் பிரச்சினைகள் நீங்குகின்றன.

எனவே இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்து நல்ல செரிமானத்தைப் பெறலாம்.

கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்க

கொடை ஆரஞ்சு சைன்ஸ்பைன் உடலில் கொழுப்பு உற்பத்தியைத் தடுக்கும் பொருளினை உற்பத்தி செய்கிறது. இப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் கெட்ட கொழுப்பின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினைக் கூட்டுகிறது.

மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டால் இரத்த நாளங்களில் கொழுப்பு சேருவதை இப்பழம் தடைசெய்கிறது.

மேலும் இப்பழத்தில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தான கெமிசெல்லுலோஸ் மற்றும் கரையாத நார்ச்சத்தான பெக்டின் போன்றவை குடலில் கொழுப்பு உறிஞ்சுதலைத் தடைசெய்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கலாம்.

உடல் எடை குறைப்பிற்கு

கொடை ஆரஞ்சில் உள்ள நார்ச்சத்தானது வயிற்றினை நிறைய நேரம் நிரம்பச் செய்து பசியினை தள்ளிப் போடுகிறது.

வயிறானது நீண்ட நேரம் நிரம்பி இருப்பதால் உட்கொள்ளும் நொறுக்கு தீனியின் அளவு குறையும். இதனால் உடல் எடை குறையும்.

மேலும் இப்பழம் இன்சுலின் அளவினைக் குறைத்து உடலில் உள்ள சர்க்கரையானது கொழுப்பாக மாற்றப்படாமல் எரிபொருளாக பயன்படுத்த ஊக்குவிக்கிறது. இதனாலும் உடல் எடை குறைகிறது.

மேலும் இது சருமச்சுருக்கங்கள், பரு, சருமம் உலர்ந்து போதல் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு

கொடை ஆரஞ்சானது கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஃபோலேட்டுகளைக் கொண்டுள்ளது.

ஃபோலேட்டுக்களின் குறைபாட்டால் குழந்தைகள் எடைகுறைந்து பிறந்தல், பிறப்பு குறைபாடு ஆகியவற்றுடன் பிறக்க நேரிடும்.

எனவே கொடை ஆரஞ்சினை உண்டு கர்ப்பிணிப்பெண்கள் தங்கள் நலத்தினையும், குழந்தையின் நலத்தினையும் பாதுகாக்கலாம்.

கொடை ஆரஞ்சினை வாங்கிப் பயன்படுத்தும் முறை

கொடை ஆரஞ்சினை வாங்கும்போது புதிதாகவும், கனமானதாகவும், பளபளப்பாகவும், மேற்தோலில் காயங்கள் இல்லாமல் இருப்பவற்றை வாங்க வேண்டும்.

மேல்தோல் சுருங்கிய, வெட்டுக்காயங்கள் உள்ள லேசானவற்றை தவிர்க்கவும். இப்பழத்தினை அறையின் வெப்பநிலையில் ஒரு வாரம் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

குளிர்பதனப்பெட்டியில் இருவாரங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். கொடை ஆரஞ்சினை உண்ணும்போது மேல்தோலினை உரித்துவிட்டு உள்ளிருக்கும் சுளைகளில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு மெல்லியதோலுடன் உண்ண வேண்டும்.

English Summary: Health benefits of Kodai Orange
Published on: 27 December 2018, 02:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now