Health & Lifestyle

Wednesday, 05 December 2018 05:18 PM

சரும பாதுகாப்பிற்கு

இக்காயில் உள்ள விட்டமின் சி உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் சருமத்தினைப் பாதுகாக்கின்றன. விட்டமின் சி அதிகம் கொண்ட உணவினை உட்கொள்ளும்போது சருமம் மிருதுவாகவும், பொலிவாகவும், தூய்மையானதாகவும் மாறுகிறது. பருக்கள் மற்றும் உலர் சருமத்திற்கு இக்காய் நல்ல தீர்வாக அமைகிறது.

நோய் எதிர்பாற்றலைப் பெற

இக்காயில் விட்டமின் சி அதிகளவு உள்ளது. விட்டமின் சி-யானது உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்கக்கூடியது. இதனால் சளி, இருமல் உள்ளிட்ட நோய் தொற்றுகளிலிருந்து நம்மை இக்காய் பாதுகாக்கிறது.

அனீமியாவை போக்க

இக்காயானது அதிகளவு இரும்புச்சத்தையும், விட்டமின் சி-யையும் கொண்டுள்ளது. இதனை உட்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து பெறப்பட்டு உடலால் உட்கிரக்கிக்கப்படுகிறது. எனவே இரும்புச்சத்து குறைபாட்டால் உண்டாகும் அனீமியாவைக் குணப்படுத்த அருநெல்லிகாயை உண்ணலாம்.

உடல் எடை குறைப்பிற்கு

அருநெல்லி இலையானது உடல் எடை குறைப்பிற்கு சிறந்த தீர்வாகும். நெல்லி இலையில் நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட், பிளவனாய்டுகள், சபோனின், டானின்கள், பாலிபீனால்கள், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளன.

இவ்விலையில் உள்ள சபோனின் சத்தானது குடலானது அதிகமான கொலஸ்ட்ராலை உறிஞ்சுவதைத் தடைசெய்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு

அருநெல்லிக்காயில் இரும்புச்சத்தும், கால்சியமும் அதிகளவு உள்ளன. எனவே இக்காயினை உண்ணும் போது எலும்புகளின் அடர்த்தி அதிகரிப்பதோடு அவை வலுவாகவும் செய்கின்றன. எனவே வலுவான எலும்புகளைப் பெற அருநெல்லியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கொள்ளலாம்.

நல்ல செரிமானத்திற்கு

அருநெல்லியில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உணவினை நன்கு செரிக்க உதவுகின்றன. இக்காயில் உள்ள நார்ச்சத்தானது குடலில் உள்ள நச்சுக்கழிவுகளை ஒன்று திரட்டி எளிதாக வெளியேற்றுகிறது. மேலும் இக்காய் மலமிளக்கியாகச் செயல்படுகிறது. இதனால் மலச்சிக்கல், மூலநோய் உள்ளிட்ட நோய்களுக்கு இக்காய் தீர்வாகிறது.

அருநெல்லிக்காயினை வாங்கி உபயோகிக்கும் முறை

அருநெல்லிகாயினை வாங்கும்போது சீரான மஞ்சள் கலந்த பச்சை நிறத்துடன் புதிதாக உள்ளவற்றைத் தேர்வு செய்யவும். மேல் தோலில் வெட்டுக்காயங்கள், கீறல்கள் உள்ளவற்றைத் தவிர்க்கவும். இவற்றை உபயோகிக்கும்போது தண்ணீரில் அலசி துணியால் துடைத்துப் பயன்படுத்தலாம்.

அருநெல்லிக்காயானது இனிப்புகள், ஊறுகாய்கள், ஜாம்கள், கேக்குகள், குளிர்பானங்கள், சாலட்டுகள் உள்ளிட்டவை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவை இவற்றின் மணத்திற்காகவும் சில உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகின்றன.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)