சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 20 August, 2021 5:39 PM IST
Foods for A Restful Sleep
Foods for A Restful Sleep

பலருக்கு ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்கள். இரவில் பல நேரங்களில் தூக்கம் கலைந்து விட்டால், பிறகு மீண்டும் தூங்குவது மிகவும் கடினமாக இருக்கும். இரவில் தூங்காத பிரச்சனையால் வாடுபடுபவர்களால், உற்சாகமாக வேலை செய்யவும் பிரச்சனை இருக்கும்.  ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதால், உங்கள் வேலை திறன் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  ஓய்வெடுக்க நமது உடலுக்கு குறைந்தது 8 மணிநேரம் தேவை. அப்போது தான் அடுத்த நாளை உற்சாகமாக செலவிட முடியும்.

உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங்,  இது குறித்து, தூக்கமின்மைக்கு வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம் என்று கூறுகிறார். உங்கள் உணவில் சேர்க்கப்படும் சில உணவுகள், உங்களுக்கு ஆழ்ந்த நிம்மதியாக உறக்கத்தை கொடுக்கும் என்கிறார்.

பாதாம்(Almonds)

பாலைப் போலவே, பாதாமிலும் ட்ரிப்டோபன் உள்ளது, இது மூளை மற்றும் நரம்புகளை அமைதி படுத்தி. மூளையின் சக்தியை அத்திபாரித்து,உங்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும். அதே நேரத்தில், இதில் உள்ள மெக்னீசியம் உங்கள் இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க பயனளிக்கிறது. தினமும் ஒரு கைப்பிடி  பாதாம் உட்கொண்ட பிறகு நன்றாக தூங்குங்கள்.

டார்க் சாக்லேட்(Dark Chocolate)

பாதாம் தவிர, டார்க் சாக்லேட் சிறந்த தூக்கத்தை அளிக்கும் உணவுகளில் ஒன்றாகும். இதில் செரோடோனின் உள்ளது. இது உங்கள் மனம் மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

வாழைப்பழம்(Banana)

ஊட்டசத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் நிம்மதியான தூக்கத்திற்கு  உதவியாக இருக்கும். வாழைப்பழத்தில் தசைகளுக்கு ஆற்றல் அளிக்கும் ஊட்டசத்துக்கள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் காணப்படுகின்றன. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்  அதிகம் இருப்பதால், இது இயற்கையாகவே உங்களுக்கு தூக்கத்தை வழங்குகிறது.

சூடான பால் அருந்துதல்(Hot Milk)

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் நல்ல தூக்கத்திற்கு நல்ல பானமாகும். பாலில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் அதிகமாக இருப்பதால், இது செரோடோனினாக மாறும். செரோடோனின் மூளைக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும். இது உங்களுக்கு நல்ல தூக்கத்தை அளிக்கிறது. ஒரு சிட்டிகை ஜாதிக்காய், ஒரு சிட்டிகை ஏலக்காய் மற்றும் சில பாதாம் பருப்புகள் பாலின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

செர்ரி பழங்கள்(Cherry Fruits)

செர்ரி பழங்களில் பினியல் சுரப்பியில் உற்பத்தி செய்யப்படும் மெலடோனின் என்ற ஹார்மோன் காணப்படுகிறது, இது  தூக்கத்தை சீராக்குகிறது. மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்திற்கு செர்ரி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 10-12 செர்ரிகளை சாப்பிடுவது நல்ல நித்திரைக்கு வழி வகுக்கும்.

மேலும் படிக்க:

செவ்வாழையின் சூப்பர் நன்மைகள்! யாரெல்லாம் இதை தவிர்க்க வேண்டும்!

மழைக்காலத்தில் ஆஸ்துமா பிரச்சனைகளுக்கான முன்னெச்சரிக்கைகள்

English Summary: Here are five foods for a restful sleep!
Published on: 20 August 2021, 05:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now