மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 February, 2021 6:27 PM IST


நம் உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு பணிகளை செய்கின்றன. அதில் மிக கனவமும் பெரும் பணியான காணும் பணியை கண்கள் செய்கிறது. ஆயுள் முழுமைக்கும் கண் பார்வை வலுவாக இருக்கவும் கண்கள் பாதிக்காமல் இருக்கவும் முறையான பராமரிப்பு மேற்கொள்வது மிக மிக அவசியம். அவ்வாறு கண்களை பராமரிக்கும் தரும் சில அற்புத மூலிகைகள் குறித்து இங்கு பார்க்கலாம்..

கண் ​பார்வை குறைபடு

கண் பார்வை பிரச்சனைகள் பொதுவாக எல்லோருமே தங்களது நடுத்தர வயதில் சந்திக்க நேரிடும். ஆனால் இது தற்காலிகமானதுதான். சாளரம் என்று சொல்லகூடிய பார்வை குறைபாடு நடுத்தர வயதுக்கு பிறகு எல்லோருக்கும் வரக்கூடும். கண் பார்வைகள் தெளிவில்லாமல் இருக்கும் இந்த காலத்தை சற்று நிதானித்து கடந்துவிட்டால் இயல்பாக மீண்டும் பார்வைத்திறன் சரியாகும்.

இப்போது கண்களுக்கு தான் அதிகம் வேலை கொடுக்கிறோம். அதிலும் செல்ஃபோன், லேப் டாப், கணினி என நேரம் செல்வதே தெரியாமல் கண்களுக்கு அதிக பளு கொடுக்கும் இந்த காலத்தில் பார்வை குறைபாடு எளிதாக விரைவாக வந்துவிடுகிறது. இதை தடுக்கவும் கண்களை வலுப்பெறவும் சில மூலிகைகள் உண்டு. அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

கண் எரிச்சல் போக்கும் - ​நெய்ச்சட்டிக்கீரை

வயல் வரப்புகளில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் இடங்களில் வரக்கூடிய கீரை இது. நெய்ச்சட்டி கீரை என்று அழைக்கப்படும் இது பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். கண் எரிச்சல் இருக்கும் போது இந்த கீரையை ஆய்ந்து இடித்து சாறு எடுத்து கண்களில் ஒரு துளி வீதம் காலை மாலை விட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கும்.

மங்கலான கண் பார்வை சரியாக்கும் - ​சம்பங்கிபூ

எளிதாக கிடைக்கும் இந்த சம்பங்கி பூ கண் பார்வை மங்கலாக இருப்பவர்களுக்கு மிகுந்து பயன்களைத் தரும். சம்பங்கி மரத்தின் இளந்தளிரை கொண்டு வந்து நன்றாக ஓடும் நீரில் அலசி பிறகு கசக்கினால் சாறு கிடைக்கும். சாறை பிழிந்து சுத்தமான சிறு கண்ணாடி பாத்திரத்தில் விட்டு அதே அளவு பன்னீர் கலந்து நன்றாக கலக்கவும். இதை காலையும் மாலையும் கண்களில் இரண்டு துளி விட்டு வந்தால் மங்கலான பார்வை தெளிவடையும். கண்கள் பளிச்சிடும்.

கண் பார்வை சரியாக்கும் - ​ஜாதிக்காய்

ஜாதிக்காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஜாதிக்காயை கழுவி எடுத்து அம்மியில் இடித்து பொடிப் பொடியாக்கவும். இதை காய்ச்சாத பசும்பாலில் கலந்து நன்றாக மை போல் அரைத்தெடுக்கவும். இதை இரவு தூங்கும் போது கண்களை சுற்றி பற்று போல் போட்டு கொள்ள வேண்டும். காலையில் வெதுவெதுப்பான நீரில் கண்கள் கழுவிவர வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இதை செய்து வந்தால் கண் உஷ்ணத்தால் வரும் கண் கட்டி வராது. கண் குளிர்ச்சியாக இருக்கும். கண் பார்வை தெளிவு பெறும்.

கண் கட்டியை அகற்றும் - ​திருநீற்றுப்பச்சிலை

திருநீற்றுப்பச்சைலை இலையை நீரில் அலசி பிழிந்து சாறு எடுக்க வேண்டும். இந்த சாறை கண் கட்டிகள் மேல் பூசி வர வேண்டும். சாறு உலர உலர சுத்தமான வெள்ளைத்துணியில் துடைத்து மீண்டும் மீண்டும் பற்று போல் கட்டி மீது போட வேண்டும். இந்த சாறு பற்று போல் போட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க...

அஜினோமோட்டோ ஒரு Slow Killer - தெரியுமா உங்களுக்கு?

புறஊதாக் கதிர்களில் இருந்து தோலைப் பாதுகாக்க திராட்சைப்பழம்: ஆய்வில் தகவல்

இனிப்பான கரும்பின் மருத்துவ குணங்கள் அறிவோம்!

English Summary: Here the list of Amazing herbs that protect the eyes from all problems
Published on: 11 February 2021, 06:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now