Health & Lifestyle

Wednesday, 13 October 2021 10:39 AM , by: Aruljothe Alagar

Home Remedies To Control Thyroid! No need to take medicine daily!

தைராய்டை கட்டுப்படுத்த வீட்டு வைத்தியம்:

தைராய்டு பிரச்சனை இப்போதெல்லாம் மிகவும் பொதுவானதாகிவிட்டது. இந்த பிரச்சனை ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் காணப்படும். இத்தகைய சூழ்நிலையில், உணவு பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், தைராய்டைக் கட்டுப்படுத்தலாம். சாப்பாடு பழக்கவழக்கத்தின் மூலம் தைராய்டை கட்டுப்படுத்த பல விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று கொத்தமல்லி.

மக்னீசியம், இரும்பு, மாங்கனீசு போன்ற சத்துக்கள் கொத்தமல்லியில் உள்ளன. கொத்தமல்லியில் உணவு நார்ச்சத்து உள்ளது. மற்ற சத்துக்கள் பற்றி பேசுகையில், வைட்டமின் சி, கே கொத்தமல்லியில் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், கொத்தமல்லியின் உதவியுடன் தைராய்டை நீங்கள் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

  • தைராய்டைக் குறைக்க இது சரியான வீட்டு வைத்தியம் ஆகும்.
  • தைராய்டிற்கு கொத்தமல்லியை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
  • தைராய்டிற்கு கொத்தமல்லியை உட்கொண்டால் எடை குறையும்.
  • தைராய்டிற்கு கொத்தமல்லியை உட்கொள்வது எலும்பு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

கொத்தமல்லியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன, இதன் காரணமாக தைராய்டு நோயாளிகளுக்கு மன அழுத்தம் ஏற்படாது.

இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் தைராய்டு அதிகரிக்கலாம், ஆனால் கொத்தமல்லியை உட்கொள்வது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கிறது.

தைராய்டை கட்டுப்படுத்த, கொத்தமல்லியை இந்த வழியில் உட்கொள்ளுங்கள். தைராய்டைக் கட்டுப்படுத்த, இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லியை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரே இரவில் ஊற வைக்கவும். காலையில் நீங்கள் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்னர் தண்ணீரை வடிகட்டி குடிக்கவும், பிறகு அது தைராய்டை கட்டுப்படுத்த உதவும்.

தைராய்டை கட்டுப்படுத்த, கொத்தமல்லி இலை சாற்றை இப்படி செய்யவும்

நீங்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி சாற்றை உட்கொள்ள வேண்டும். கொத்தமல்லி சாற்றை தினமும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் குடிப்பதன் மூலம் தைராய்டை கட்டுப்படுத்தலாம்.

மேலும் படிக்க...

தைராய்டு பிரச்சனையின் ஆரம்ப அறிகுறிகள் – அனைவரின் உடலிலும் இருக்கும் தைராய்டு சுரபி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)