Health & Lifestyle

Monday, 10 June 2019 06:10 PM

யோகா என்பது உடலையும், மனதையும்,  புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் வைத்திருக்க உதவும். யோகா எனும் பயிற்சி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலானோர் இன்று யோகா செய்வதை வழக்கமாகி உள்ளனர்.

நம்மில் பலரும் இன்று யோகாவுடன் நாட்களை தொடங்குகின்றனர். பெரும்பாலான இடங்களில் குறிப்பாக பூங்காவில் அனைவரும் இணைத்து யோகா செய்வதை வழக்கமாக்கி உள்ளனர். மக்களிடம் யோகா பற்றியும், உடற்பயிற்சி பற்றியும் அதிக விழிப்புணர்வு உள்ளது.

ஜூன் 21 ஆம் தேதி யோகா தினமாக உலகமுழுவதும் கொண்டாட பட்டு வருகிறது. இந்த சமயத்தில் நாம் யோகா பற்றி மேலும் தெரிந்து கொள்ளல் அவசியமாகும்.

யோகாவின் பலன்கள்

யோகா செய்வதினால் எண்ணிலடங்கா நன்மைகள் உண்டாகும். 5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை நம் முன்னோர்கள் பயிற்சி செய்து பல அற்புத பலன்களை பெற்றுள்ளனர். யோகா என்பது ஒரு குறிப்பிட்ட மதம் சார்த்த கோட்பாடு அல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும். முழுவதும் உடற்பயிற்சி, மனபயிற்சி, மூச்சுபயிற்சி போன்ற பயிற்சிகளை உள்ளடக்கியது.

யோகா பயிற்சி செய்வதற்கு என்று பிரத்தியேகமாக ஏதும் தேவையில்லை. எந்த வயதிலும் பயிற்சியினை தொடங்கலாம். செய்வதற்கு ஆர்வம் மட்டுமே போதுமானது. அவரவர்களின் உடல் மற்றும் மன வலிமையினை பொறுத்து எளிய பயிற்சி முதல் கடுமையான பயிற்சி வரை செய்யலாம். யோகா பயிற்சி செய்யவில்லை என்றாலும் அது எந்த பக்க விளைவினையும் தராது.

முறையாக யோகா செய்வதினால் உடல் நலத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மரணத்தை தள்ளிப் போடுகிறது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. 

மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது , மேலும் தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, மனஒருமைப்பாட்டை போன்றவை வளர்க்க முடியும். மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மனஇறுக்கம், அபரிமித உணர்வுகள், வன்முறை உணர்வுகள், பயம் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.

யோகா செய்வதினால் உடலில் ஏற்படும் நன்மைகள்

  • உடலின் இசைவு இணக்கம் ஆகியவற்றை அதிகரிக்கிறது.
  • தசைகளின் நலத்தையும் வலிமையையும் பாதுகாக்கிறது.
  • சுவாசத்தை சீராக்கி உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது.
  • தேவைற்ற கொழுப்பு சத்தை குறைக்கிறது.
  • இதயம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை சீர் படுத்துகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

யோகா செய்ய வேண்டுமெனில் உணவில் கட்டுப்பாடு அவசியமாகும். மது, புகையிலை, சிகரெட், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், பாஸ்ட்புட் உணவு  வகைகளை தவிர்க்க வேண்டும்.உணவு உண்டபின் ஆசனம் செய்யக்கூடாது.

யோகா செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை ஆகும். வெறும் வயிற்றில் பயிற்சி செய்வதினால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் அரைமணி நேரம் பயிற்சி அந்நாள் முழுவதற்கும் போதுமானது.

Anitha Jegadeesan

Krishi Jagran 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)