மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 December, 2018 5:44 PM IST

நாவல்மரத்தின் இலை, பழம், விதை, பட்டை என அனைத்துப் பாகங்களும் மருத்துவ தன்மை உடையவையாக உள்ளன.

 ஹீமோகுளோபின் உற்பத்தியினை அதிகரிக்க

இரும்பச்சத்து இரத்த சிவப்பணுவிற்குக் காரணமான ஹீமோகுளோபின் உற்பத்திற்கு மிகவும் அவசியமாகும்.

இரத்தமே நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் ஆக்ஸிஜனையும், ஊட்டச்சத்துக்களையும் எடுத்து சென்று சீரான வளர்ச்சிதை மாற்றம் நடைபெறக் காரணமாகிறது.

நாவல்பழத்தில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் உற்பத்தினை அதிகரித்து ஆரோக்கியமான இரத்த செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும் ஹீமோகுளோபின் இரத்தத்தை சுத்தகரிக்கிறது. எனவே நாவல்பழத்தினை உண்டு ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

 சர்க்கரை நோயினைக் கட்டுப்படுத்த

இப்பழமானது குறைந்த அளவு குளுக்கோஸையும், குறைந்த கிளைசெமிக் குறியீட்டினையும் கொண்டுள்ளது. இப்பழத்தினை உண்ணும்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுவதோடு தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன.

இப்பழத்தில் காணப்படும் ஒலினோலிக் அமிலம் சர்க்கரைநோய் எதிர்ப்பு பண்பினைக் கொண்டுள்ளது. இப்பொருள் இன்சுலின் சுரப்பினை அதிகரிப்பதோடு அதனை முறையாக உடல் பயன்படுத்தவும் உதவுகிறது.

இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை சக்தியாக மாற்றப்படுகிறது. மேலும் இப்பழம் இரத்தத்தில் சர்க்கரை மற்றும் லிப்பிடுகளின் செயல்பாட்டினைக் குறைத்து நீரழிவு சிக்கலைச் சரிசெய்கிறது.

இப்பழம் மற்றும் விதை, பட்டைகளை முறையாக தொடர்ந்து உண்ணும்போது சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் அதிக தாகம், அதிகப்பசி, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம் போன்ற சர்க்கரைநோய் அறிகுறிகள் நிறுத்தப்படுகின்றன.

இப்பழத்தினை உண்டு இரண்டாவது வகை நீரழிவு நோயினைக் கட்டுப்படுத்தலாம்.

 இதயத்தைப் பாதுகாக்க

இப்பழமானது ட்ரைடென்போயிட் என்ற பொருளினைக் கொண்டுள்ளது. இப்பொருள் நம் உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது.

ட்ரைடென்போயிட் நம் உடலில் கொலஸ்ட்ரால் உற்பத்தி மற்றும் அதிகரிப்பதை தடை செய்கிறது. எனவே இப்பழமானது இதய நோயால் பாதிப்பட்டவர்களுக்கு இப்பழம் வரபிரசாதமாகும்.

இதனால் உயர்இரத்த அழுத்தம், மாரடைப்பு உள்ளிட்ட இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

செரிமான சம்பந்தமான வியாதிகளுக்கு

அல்சர், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமானம் சம்பந்தமான நோய்களுக்கு நாவலானது சிறந்த தீர்வினை அளிக்கிறது.

இப்பழமானது பாக்டீரிய எதிர்ப்பு பண்பினைக் கொண்டுள்ளதால் இப்பழத்தினை உண்ணும்போது செரிமானப் பாதையில் நோய்தொற்று தடுக்கப்படுகிறது. இதனால் குடல்வால் நோய், தீவிர வயிற்றுப்போக்கு ஆகியவை தடைசெய்யப்படுகின்றன.

இப்பழத்தில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்தானது இதனை சிறந்த மலமிக்கியாக செயல்படச் செய்து மலச்சிக்கலுக்கு தீர்வளிக்கிறது.

இப்பழத்தினை உண்ணும்போது வாயில் உமிழ்நீரானது நன்கு சுரக்கிறது. இதனால் உணவுப்பொருட்கள் வாயில் சிதைக்கப்பட்டு செரிமானம் எளிதாகுகிறது. எனவே இப்பழத்தினை உண்டால் செரிமான சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

கல்லீரலைப் பாதுகாக்க

கல்லீரல் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி தூய்மையாக்கும் பணியினைச் செய்கிறது. கல்லீரல் நன்றாக இருந்தால்தான் பித்தப்பை சரிவர செயல்பட்டு லிப்டுகளைச் சிதைத்து ஆற்றல் கிடைக்கும்.

நாவல்பழமானது இரத்தத்தை சுத்தகரிப்பு செய்வதால் கல்லீரலின் ஆரோக்கியம் பேணப்படுகிறது. ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாட்டால் லிப்டுகள் அதிகமாக சேர்வது தடுக்கப்படுகிறது. இதனால் உடல் பருமன், பெருந்தமனித் தடிப்பு ஆகிய உடல் நலப்பிரச்சினைகள் தடை செய்யப்படுகின்றன.

 சருமம் பொலிவு பெற

நாவல்பழமானது விட்டமின் சி-யினைக் கொண்டுள்ளது. விட்டமின் சி சருமத்திற்கு பொலிவினையும், பளபளப்பினையும் தருகிறது.

இப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினை தடைசெய்வதோடு கொலாஜன் என்ற புரதத்தினையும் சுரக்கச் செய்கிறது. இப்புரதம் சருமம் சுருக்கம் ஏற்படுவதை தடைசெய்கிறது.

இது தோல் மீளுருவாக்கம், தோலின் அமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. வடுக்கள், காயங்கள் ஏற்பட்ட சருமத்தில் இப்பழவிதை பொடியினைத் தடவிவர நாளடைவில் அவை மறைந்து விடும்.

 பற்களின் பாதுகாப்பிற்கு

நாவலில் உள்ள விட்டமின் சி-யானது பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துகிறது. மேலும் இவ்விட்டமின் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுவதை தடுக்கிறது.

இப்பழத்தின் பாக்டீரிய எதிர்ப்பு பண்பின் காரணமாக பற்கள் சிதைவுறுவது தடுக்கப்படுகிறது. மேலும் இப்பழம் வாய்துர்நாற்றத்தையும் தடைசெய்கிறது.

புற்றுநோயினைத் தடைசெய்ய

இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது. இப்பழத்தில் உள்ள பாலிஃபீனால்கள் புற்றுசெல்கள் உண்டாவதை தடைசெய்கிறது.

இப்பழத்தில் உள்ள ஆந்தோசையனின், ஃப்ளவனாய்டுகள், காலிக் அமிலம் ஆகியவை ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினை தடைசெய்து புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கிறது.

English Summary: Jamun Fruit- uses
Published on: 05 December 2018, 05:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now