Health & Lifestyle

Wednesday, 10 August 2022 11:53 AM , by: R. Balakrishnan

Purple cabbage

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் காய்கறிகளில் ஒன்று முட்டைக்கோஸ். தற்போது பரவலான பயன்பாட்டிலுள்ள ஊதா நிற முட்டைக்கோஸிலும் வைட்டமின் ஏ, சி மற்றும் கே, நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கால்சியம், பொட்டாசியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதனை, வாரம் இரு முறையாவது சாப்பிட வேண்டும் என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் அட்வைஸாக உள்ளது. இதை சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம். சாலட், சூப் என பல வழிகளில் பயன்படுத்தலாம். எனவே, இதிலுள்ள நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

ஊதா முட்டைகோஸ் (Purple cabbage)

  • ஊதா முட்டைகோஸில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த ஊதா நிற முட்டைக்கோஸ் வெகுவாக உதவுகிறது.
  • ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமுள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
  • வைட்டமின் ஏ சத்தானது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமின்றி சருமத்தை பளபளப்பாக வைக்கவும் உதவுகிறது.
  • இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் ரத்த அணுக்களில் எண்ணிக்கையை அதிகரிக்கிறது;
  • ரத்த அழுத்தத்தை சீராக்கி கட்டுக்குள் வைப்பதால் மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகள் தவிர்க்கப்படுகிறது.
  • வைட்டமின் சி மற்றும் கே, கால்சியம், மாங்கனீசு போன்ற சத்துகள் எலும்புகளை வலுப்படுத்துகிறது.
  • இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன.
  • உடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்தி, அசிடேட், ப்யூட்ரேட் மற்றும் ப்ரோபியோனேட் போன்ற கொழுப்பு அமிலங்களை ஊக்குவிப்பதால் குடலின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.
  • முட்டைக்கோஸை தொடர்ந்து சாப்பிட குடல் புண்களுக்கும் தீர்வு கிடைக்கிறது. இதை ஜூஸாக சாப்பிட சில நாட்களிலேயே வயிற்றுப்புண்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது.

மேலும் படிக்க

அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பவரா நீங்கள்? இந்த டிப்ஸ் உங்களுக்குத் தான்!

சரும அழகை கூட்டும் 4 இயற்கையான எண்ணெய்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)