மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 November, 2021 5:50 PM IST
Knowledgeable afternoon sleep

மதிய நேரத்தில் குட்டி துாக்கம் போடுவது மனிதர்களின் அறிவாற்றல் திறனை அதிகரிப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. மதிய நேரத்தில் துாங்குவது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்ற பொதுவான கருத்து உள்ளது. அதே நேரம் மதியத்தில் குட்டி துாக்கம் போடுவது மனித ஆற்றலை மேம்படுத்துவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

புதிர் போட்டி

பீஹாரின் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உடலியல் பிரிவைச் சேர்ந்த டாக்டர்கள் குழு, 18 - 24 வயது வரையிலான 68 பேரிடம் ஆய்வு நடத்தியது. அவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, 'சுடோகு' (Sudoku) என்ற கணித புதிர் போட்டி அளிக்கப்பட்டது. அதில் கடுமையான கட்டத்தை அவர்கள் எட்டும் போது, ஒரு குழுவினரை ஒரு மணி நேரம் துாங்க அனுமதிக்கப்பட்டது.

மற்றொரு குழுவை துாங்காமல் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின், நிறுத்திய இடத்தில் இருந்து இரண்டு குழுக்களையும் புதிர் போட்டியை நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதில், குட்டி துாக்கம் போட்ட குழுவை சேர்ந்த பலர், புதிர் போட்டியை சரியாக முடித்தனர். அதே நேரம் துாங்காமல் ஓய்வெடுத்த குழுவில் புதிருக்கான விடையை கண்டுபிடிக்க முடியாமல் பலர் திணறினர்.

இது குறித்து பாட்னா எய்ம்ஸ்(AIMS) மருத்துவமனையின் உடலியல் துறை கூடுதல் பேராசிரியர் கமலேஷ் ஜா கூறியதாவது: இந்த ஆய்வு துவக்கக்கட்டத்தில் உள்ளது. அதன் இடைக்கால முடிவுகளை தான் தற்போது வெளியிட்டுள்ளோம். இதில் மேலும் பல தன்னார்வலர்களை ஈடுபடுத்தி ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்க அரசிடம் நிதி கேட்டு கோரிக்கை வைக்க உள்ளோம்.

பலமடங்கு

மதிய நேரத்தில் குட்டி துாக்கம் போடுவதால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. அவர்களின் கணித திறன் உட்பட, உடலியல் திறன் பலமடங்கு மேம்படுகிறது என்று அவர் கூறினார். இதற்கிடையே, பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இரவு, 10:00 - 11:00 மணிக்குள் துாங்குவோருக்கு இருதயம் தொடர்பான பாதிப்பு அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

நீண்ட ஆயுளைப் பெற இதை சாப்பிடுங்கள்!

அடிக்கடி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன?

English Summary: Knowledgeable afternoon sleep: information from the Ames study!
Published on: 16 November 2021, 05:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now