மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 January, 2019 4:40 PM IST

 

உணவு சமைக்கும் போது அதன் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் கறிவேப்பிலையை சேர்ப்போம்.

அப்படி உணவில் சேர்க்கப்படும் இந்த கறிவேப்பிலையை சிலர் தூக்கி எறிந்து விடுவார்கள்.

ஆனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 120 நாட்கள், நாம் இந்த கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால், ஏராளமான பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.

கறிவேப்பிலையில் விட்டமின் A, விட்டமின் B, விட்டமின் B2, விட்டமின் C, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.

கறிவேப்பிலை இலையின் மருத்துவ நன்மைகள்

  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையின் இலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால், நமது வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து, அழகான இடையைத் தருகிறது.
  • காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை சேர்த்து உட்கொண்டு வந்தால், நமது உடலில் இருக்கும் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கச் செய்து, ரத்த சோகை பிரச்சனையை வராமல் தடுக்கிறது.
  • சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டால், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக்கி, சர்க்கரை நோய் ஏற்படுவதை தடுக்கிறது.
  • கறிவேப்பிலை, நமது உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து, நல்ல கொழுப்புக்களை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனை வராமல் பாதுகாக்கிறது.
  • அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிட்டால், நமது குடலியக்கத்தை சீராக்கி, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பதோடு மட்டுமில்லாமல், தினமும் அதை காலையில் பச்சையாக சாப்பிட்டு வந்தால், கருமையான முடியின் வளர்ச்சி மற்றும் கல்லீரலின் வலிமையை மேம்படுத்துகிறது.
  • ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன், சிறிதளவு தேன் கலந்து தினமும் காலையில் இரண்டு வேளைகள் சாப்பிட்டு வந்தால், நமது உடலில் இருக்கும் கடுமையான சளித் தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
English Summary: Medicinal properties of Curry leaf (1)
Published on: 02 January 2019, 03:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now