சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 20 September, 2019 6:12 PM IST

புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்க

கொண்டைக்கடலையில் உள்ள செலீனியமானது கல்லீரல் நன்கு செயல்பட ஊக்குவிக்கிறது. இதனால் உடலில் உள்ள புற்றுநோய்க்கு காரணமானவை அழிக்கப்படுகின்றன.

மேலும் செலீனியம் புற்றுகட்டி உருவாதைத் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள ஃபோலேட்டுகள் டிஎன்ஏ உற்பத்தி மற்றும் பழுதுபார்ப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

டிஎன்ஏ உருமாற்றமே புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாகும். ஃபோலேட்டுகள் டிஎன்ஏ உருமாற்றம் நடைபெறுவதைத் தடைசெய்கிறது.

கொண்டைக்கடலையில் காணப்படும் சபோனின் புற்றுச்செல்களின் பெருக்கத்தைத் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து குடல்புற்றுநோயையும், ஐசோப்ளவனாய்டுகள் மார்பகப்புற்று நோயையும் தடைசெய்கிறது.

கண்களின் ஆரோக்கியத்திற்கு

கொண்டைக்கடலையில் உள்ள பீட்டா-கரோடீன்கள், துத்தநாகம் ஆகியவை கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. துத்தநாகம் கண்களின் தசைஅழற்சி நோய் ஏற்படாமல் தடைசெய்கிறது.

துத்தநாகம் கல்லீரலில் இருந்து விட்டமின் ஏ-வானது ரெக்டீனாவிற்குச் செல்ல உதவுகிறது. எனவே கொண்டைக்கடலையை உண்டு கண்களின் ஆரோக்கியத்தைப் பேணலாம்.

எலும்புகளைப் பாதுகாக்க

கொண்டைக்கடலையில் உள்ள மெக்னீசியம் கால்சியத்தோடு சேர்த்து எலும்புகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இதில் உள்ள மாங்கனீசு, துத்தநாகம், விட்டமின் கே உள்ளிட்டவைகள் எலும்புகளின் கட்டமைப்பினை மேம்படுத்துகின்றன.

இதில் உள்ள இரும்புச்சத்து, துத்தநாகம் போன்றவை எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான கொலாஜன்கள் உற்பத்தியைத் தூண்டு கின்றன.

ஆரோக்கியமான உடல்இழப்பிற்கு

கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்தானது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வினை உண்டாக்குகிறது. இதனால் இடைவேளை உணவுகள் தவிர்க்கப்படுகின்றன.

மேலும் இதில் உள்ள புரதச்சத்து உடலில் கொழுப்பு சேகரமாவதைத் தடைசெய்கிறது. ஏனெனில் புரதம் செரிக்கப்படும்போது அதிகளவு சக்தியானது செலவு செய்யப்படுகிறது.

கொண்டைக்கடலையானது உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளதால் இதனை உண்டு ஆரோக்கியமான உடல்இழப்பினைப் பெறலாம்.

புரத ஊற்று

கொண்டைக்கடலையானது தாவர புரச்சத்தைக் கொண்டுள்ள முக்கியமான உணவுப் பொருளாகும். புரதச்சத்தானது உறுப்பு மண்டலங்கள், தசைகள், திசுக்கள் உள்ளிட்டவைகளின் மூப்பினைத் தள்ளிப் போடுகின்றன.

புரதச்சத்தானது இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துவதோடு ஹீமோகுளோபின் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. மேலும் காயங்களை விரைந்து ஆற்றவும் உதவுகிறது. எனவே புரத ஊற்றான கொண்டைக்கடலையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நல்ல செரிமானத்திற்கு

கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்தானது செரிமானப் பாதையில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது.

இதில் உள்ள நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட் நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து குடலில் உள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்றிவிடுவதால் வயிற்றுப்போக்கு, செரிமானமின்மை, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானப் பிரச்சினைகள் ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கின்றன.

இதயநலத்தைப் பாதுகாக்க

கொண்டைக்கடலையில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, விட்டமின் சி, பி6 ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகின்றன. நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கிறது.

இதனால் இதயநரம்புகளில் கொலஸ்ட்ரால் சேருவது தடைசெய்யப்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. இதில் உள்ள ஃபோலேட்டுகள் இரத்த உறைதலைத் தடைசெய்கிறது. எனவே இதனை உண்டு இதயநலத்தைப் பாதுகாக்கலாம்.

சரும ஆரோக்கியத்திற்கு

கொண்டைக்கடலையில் உள்ள மாங்கனீசு செல்லுக்கு ஆற்றலை வழங்குவதோடு ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினைத் தவிர்த்து சரும மூப்பினைத் தள்ளிப்போடுகிறது.

விட்டமின் பி தொகுப்புகள் செல்லுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. மேலும் இதனை சருமத்தில் தடவும்போது சருமத்தைச் சுத்தமாக்குகிறது. சூரியஒளியால் ஏற்படும் சருமப்பிரச்சினைகளுக்கு கொண்டைக்கடலை சிறந்த தீர்வாகும்.

கேச பராமரிப்பிற்கு

கொண்டைக்கடலையில் உள்ள புரதச்சத்து கேசத்திற்கு ஆரோக்கியம் அளித்து கேசம் உதிர்வதைத் தடைசெய்கிறது. இதில் உள்ள மாங்கனீசு கேசத்திற்கு உறுதியை அளிக்கிறது.

இதில் உள்ள விட்டமின் ஏ மற்றும் துத்தநாகச்சத்து பொடுகுத் தொந்தரவு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள துத்தநாகம் கேசம் அடர்த்தியாக வளர உதவுகிறது.

இதில் உள்ள செம்புச்சத்து கேசம் மீண்டும் வளர்வதை ஊக்குவிக்கிறது. எனவே கொண்டைக்கடலையை அடிக்கடி உண்டு கேசத்தைப் பராமரிக்கலாம்.

கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு

கர்ப்பிணிகளுக்கு அவசியமான ஃபோலேட்டுகள் கொண்டைக் கடலையில் அதிகளவு காணப்படுகிறது. ஃபோலேட்டுகள் கருவில் உள்ள குழந்தைகள் குறைபாடின்றிப் பிறக்க மிகவும் அவசியம்.

மேலும் இதில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து கால்சியம் போன்றவையும் இதில் காணப்படுகின்றன. ஆதலால் கொண்டைக்கடலையை உண்டு கர்ப்பிணிகள் ஆரோக்கியத்தைப் பேணலாம்.

கொண்டைக்கடலையினை வாங்கும் முறை

கொண்டைக்கடலையினை வாங்கும்போது ஒரே சீரான நிறத்துடன் பூச்சி அரிப்பு இல்லாதவற்றைப் பார்த்து வாங்க வேண்டும்.

கொண்டைக்கடலையைப் பயன்படுத்தும்போது இதனை 6-8 மணிநேரம் ஊறவைத்து பின் பயன்படுத்த வேண்டும்.

கொண்டலைக்கடலை அவித்தோ, வேறு உணவுப் பொருட்களுடன் சேர்த்தோ பயன்படுத்தப்படுகிறது.

English Summary: Medicinal uses of Chick pea
Published on: 16 November 2018, 12:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now