சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 20 November, 2018 2:39 PM IST

நெய் என்றாலே இன்றைக்கு பலரும் பயந்து பின்வாங்கும் நிலையில் இருக்கின்றனர். ஆனால் சுத்தமான நெய்யானது மனிதனின் உடல் நலத்திற்கு மிகவும் அவசியமானது.

நோய் எதிர்ப்பு பண்பினைப் பெற

நெய்யில் உள்ள ப்யூட்ரிக் அமிலமானது உடலில் டி செல்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இந்த டி செல்கள் உடலில் நோய் எதிர்ப்பு பண்பினை அதிகரிக்கச் செய்கின்றன.

மேலும் இதில் உள்ள கொழுப்பில் கரையும் விட்டமின்களான ஆன்டிஆக்ஸிஜென்டுகள் நாம் உண்ணும் ஏனைய உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சி நம் உடலின் நோய் எதிர்ப்பு பண்பினை அதிகரிக்கின்றன.

கண்களின் பாதுகாப்பிற்கு

நெய்யில் விட்டமின் ஏ-வானது அதிகளவு உள்ளது. இது கண்களின் பாதுகாப்பிற்கு அவசியமான ஒன்றாகும். மேலும் நெய்யில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் மற்றும் கரோடினாய்டுகள் கண்களில் நோயினை உண்டாக்கும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடை செய்கின்றன. இதனால் கண்அழற்சி நோய், கண்புரை நோய் ஆகியவற்றிலிருந்து கண்களை நெய்யானது பாதுகாக்கிறது.

அழற்சி எதிர்ப்பினைப் பெற

நெய்யானது குறுகிய சங்கிலி அமைப்பினைக் கொண்ட ப்யூட்ரிக் அமிலத்தைக் கொண்டுள்ளது. ப்யூட்ரிக் அமிலமானது அழற்சி எதிர்ப்பு பண்பினை உடலுக்கு குறிப்பாக இரைப்பை, குடல் உள்ளிட்டவைகளுக்கு வழங்குவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆதலால் பெருங்குடலில் புண்ணால் அவதிப்படுபவர்கள் நெய்யினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள தற்போது பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் நீண்ட நாட்களாகவே நெய்யானது அழற்சி எதிர்ப்புப் பொருளாக நம் நாட்டு மருத்துவமான சித்தம் மற்றும் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஆரோக்கியமான செரிமானத்திற்கு

நெய்யில் உள்ள ப்யூட்ரிக் அமிலமானது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு ஆரோக்கியமான செரிமானத்திற்கும் வழிவகை செய்கிறது.

நெய்யானது செரிமானத்திற்குத் தேவையான பொருட்களை எளிதில் சுரக்கச் செய்வது செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. ஏனைய எண்ணெய் பொருட்களைப் போல் நெய்யானது செரிமானத்தை தாமதப்படுத்துவதில்லை. எனவே நெய்யினை அளவோடு உண்டு ஆரோக்கியமான செரிமானத்தைப் பெறலாம்.

உடனடி ஆற்றலினைப் பெற

நெய்யானது அதிகளவு நடுத்தர சங்கிலி அமைப்பினைக் கொண்ட கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இந்த அமிலங்கள் கல்லீரலால் நேராடியாக சக்தியாக மாற்றப்படுகின்றன.

இவை அடிப்போஸ் திசுக்களில் சேகரித்து வைக்கப்படுவதில்லை. இதனால் உடல் எடையும் கூடுவதில்லை. விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட உடனடி ஆற்றலை வேண்டுபவர்கள் தேவையான நேரங்களில் நெய்யினை உண்டு ஆற்றலினைப் பெறலாம்.

இதய நலத்திற்கு

நெய்யானது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் ஒமேகா-3 அமிலத்தைக் கொண்டுள்ளது. ஒமேகா-3 அமிலமானது நல்ல கொழுப்பினைச் சார்ந்தது. எனவே நல்ல கொழுப்பினைக் கொண்டுள்ள கலப்படமில்லாத நெய்யினை அளவோடு உண்டு இதய நலத்தினைப் பேணலாம்.

அதிக வெப்பநிலையில் உருகுதிறன்

நெய்யானது அதிக வெப்பநிலையில் உருகுதிறனைப் பெற்றுள்ளது. எனவே இதனை சமையலில் பயன்படுத்தும்போது ஏனைய கொழுப்புப் பொருட்களைப் போல் எளிதில் சிதைவடைந்து ப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குவதில்லை.

எனவே உணவுப்பொருட்ளில் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகள் தடுக்கப்படுகின்றன. நெய்யானது 500 டிகிரி பாரன்கீட் உருகுநிலையைக் கொண்டுள்ளது.

சருமத்தினைப் பொலிவு பெறச் செய்ய

நெய்யானது சிறந்த மாஸ்டரைஸராகச் செயல்படுகிறது. பனிகாலங்களில் சிறிதளவு நெய்யினை சருமத்தில் தடவி பளபளப்பான, வழவழப்பான சருமத்தைப் பெறலாம்.

உதடுகளில் நெய்யினைப் பூசும்போது உதடுகளில் வெடிப்புகள் மறைவதோடு பளபளக்கவும் செய்கின்றன.

கண்களைச் சுற்றிலும் இருக்கும் கருவளையங்களில் தூங்கச் செல்லும் முன்பு நெய்யினை பூசிவர கருவளையங்கள் மறையும்.

மூளையின் புத்துணர்ச்சிக்கு

நெய்யினை உண்ணும்போது அது உள்ளத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. நெய்யானது மூளை மற்றும் நரம்புகளில் நேர்மறையான உணர்வுகளை உண்டாக்குகிறது.

நெய்யானது தன்னுடைய சுவையால் மட்டுமல்லாது அதில் உள்ள நுண்ஊட்டச்சத்துகளாலும் மூளைக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.

நெய்யினைப் பற்றிய எச்சரிக்கை

நெய்யானது அதிகளவு கொழுப்பினைக் கொண்டுள்ளதால் இதனை அளவோடு பயன்படுத்த வேண்டும். இல்லை எனில் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதோடு பலவிதமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

நெய்யானது அப்படியேவோ, உணவுப் பொருட்களில் சேர்த்தோ பயன்படுத்தப்படுகிறது. நம் முன்னோர்கள் பயன்படுத்திய வளமான நெய்யினை அளவோடு உண்டு நலமாக வாழ்வோம்.

English Summary: Medicinal uses of Ghee
Published on: 20 November 2018, 01:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now