Health & Lifestyle

Tuesday, 27 November 2018 04:16 PM

மணித்தக்காளியின் இலை, வேர், பழம் என தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளன.

குடல்புண் மற்றும் வாய்ப்புண் ஆற

மணித்தக்காளியின் பழம் மற்றும் இலைகளை உண்ணும்போது அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக குடல் மற்றும் வாயில் உண்டாகும் புண்களை ஆறச் செய்கிறது.

தொண்டைப்புண் குணமாக மற்றும் தொண்டைப்புண் உண்டாகாமல் இருக்க

மணித்தக்காளி இலை மற்றும் பழத்தினை சாறாகவோ, சமைத்தோ பயன்படுத்தும்போது தொண்டைப்புண்ணினை குணமாக்குகிறது. மேலும் தொண்டையில் புண்கள் ஏற்படாதவாறும் பாதுகாக்கிறது.

எனவே பாடகர்கள் மற்றும் மேடைப் பேச்சாளர்கள் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து தொண்டையில் புண்கள் ஏற்படாமல் தங்கள் குரல் வளத்தினைப் பாதுகாக்கலாம்.

மலச்சிக்கல் தீர

மணித்தக்காளியில் உள்ள நார்ச்சத்தானது மலமிளக்கியாகச் செயல்பட்டு மலச்சிக்கலை நீக்குகிறது. இயற்கை மலமிளக்கியாகச் செயல்படுவதால் மலச்சிக்கல் உள்ளவர்கள் இதனை அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மண்ணீரலைப் பலப்படுத்த

மணித்தக்காளியானது நோய்எதிர்ப்பு பண்பினை கொண்டுள்ளது. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது. மேலும் இது மண்ணீரலின் தசைகளை வலுப்படுத்தி மண்ணீரலை பலப்படுத்துகிறது. மண்ணீரலில் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

உடல்சூடு மற்றும் உடல்வலி குறைய

மணித்தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் காய்ச்சலினால் உண்டாகும் உடல்சூட்டினைக் குறைக்கின்றது. மணித்தக்காளிச் சாறானது காய்ச்சலினால் உண்டாகும் உடல்சூடு, உடல் வலி, மூட்டு வலி ஆகியவற்றை போக்கி உடலினை சீராக்குகிறது.

நல்ல சிறுநீரக செயல்பாட்டிற்கு

மணித்தக்காளியின் இலை மற்றும் பழச்சாறானது சிறுநீரகங்களை நன்கு செயல்படச் செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகட்டி சிறுநீரகத்தின் செயல்பாட்டினை இது ஊக்குவிக்கிறது.

சரும நோய்களை குணப்படுத்த

சரும ஒவ்வாமை, தோல் எரிச்சல், சரும கொப்புளம் போன்றவற்றிற்கு மணித்தக்காளி இலையினை அரைத்து பூச நிவாரணம் கிடைக்கும். இதில் உள்ள விட்டமின் சி சருமப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கச் செய்கிறது.

 மஞ்சள்காமாலையைத் தடுக்க

மஞ்சள்காமாலையை தடுக்க மணித்தக்காளி சிறந்த தேர்வாகும். இதனை உண்ணும்போது அது கல்லீரல் தசையை உறுதிபடுத்தி மஞ்சள்காமாலை உண்டாவதைத் தடுக்கிறது.

மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை உண்ணும்போது இது மஞ்சள்காமாலை நோயினைக் குணப்படுத்துகிறது. கல்லீரல் நோய்களால் பாதிப்படைந்தவர்களும் இதனை உண்டு நிவாரணம் பெறலாம்.

சளியால் உண்டாகும் பசியின்மையை மற்றும் சுவையின்மையை சரியாக்க

சளித்தொந்தரவு ஏற்படும்போது பசியின்மை மற்றும் சுவையின்மை ஏற்படுகிறது. மணித்தக்காளியை சூப்பாக்கி உண்ணும்போது இதில் உள்ள வைட்டமின் சி-யின் காரணமாக சளித் தொந்தரவு குறைவதோடு பசியின்மை மற்றும் சுவையின்மையும் குணமாகிறது.

ஆழ்ந்த தூக்கத்திற்கு

மணித்தக்காளிப் பழத்தினைக் காய வைத்து பொடியாக்கி பாலில் கலந்து இரவில் பருக உடல் வலி நீங்கி ஆழ்ந்த தூக்கத்தினைப் பெறலாம்.

மணித்தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

மணித்தக்காளியில் வைட்டமின் சி, பி2 (ரிபோஃப்ளோவின்), பி3 (நியாசின்), ஏ போன்றவை காணப்படுகின்றன.

இதில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்கள் உள்ளன.

மேலும் இதில் புரதச்சத்து, நீர்ச்சத்து, நார்ச்சத்து, ஃபோலேட்டுகள் ஆகியவையும் உள்ளன.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)