சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 14 July, 2021 8:50 AM IST
Credit : Dinamalar

இதய நாளங்களில் படியும் கொழுப்பு திரட்சி இறுதியில், இதய நாள இறுக்க நோயாக முற்றி, இதயத்தின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. இதற்கு, 'கொரோனியல் ஆர்ட்டீரியல் நோய்' என்று பெயர். இந்த நோயால் இதயம் செயலிழப்பதை, 1,500 ஆண்டுகளுக்கு முன்னரே திருமூலர் என்னும் சித்தர், 'இடப் பக்கமே இறை தெரிந்தது' என்றார். 'கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே என்று சித்த மருத்துவத்தில் இதை சடுதி மரணம்' என்று சொல்லப்படுவதுண்டு.

ஆராய்ச்சி

இந்த நோய் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்ட அமெரிக்க ஆராய்ச்சியாளர், உலகிலேயே இந்த நோய் இல்லாத இடம் ஏதும் உள்ளதா என்று ஆராய்ந்து, ரோமாபுரியில் உள்ள சிற்றுாரில் இந்நோயால் இறந்தவர் யாருமில்லை என்று அறிந்து, அங்கு சென்று சில காலம் தங்கி, அம்மக்களின் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறைகளைப் பற்றிய குறிப்புகளை திரட்டி ஆராய்ந்தார். முடிவில், அவர்களின் அன்றாட உணவில் மிளகு (Pepper) அதிகம் சேர்க்கப்படுவதை அறிந்தார்.

கொழுப்புத் திரட்சி

அமெரிக்கா திரும்பிய பின், தன் ஆராய்ச்சியில், மிளகு மற்றும் ரத்த நாள அடைப்பு பற்றி பல காலம் ஆராய்ந்த பின், மிளகு சாப்பிடுவதால், ரத்த நாளங்களில் படியும் கொழுப்பு திரட்சி கரைந்து விடுகிறது. இதயம் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது என்பதை உறுதி செய்து, உலகிற்கு அறிவித்தார், ஜான் நெகுலஸ்கோ என்ற விஞ்ஞானி 25 ஆண்டுகளுக்கு முன். கொழுப்புத் திரட்சி என்னும் நஞ்சை இதய நாளத்தில் படியாமல் தடுக்கும் காப்சைசின் என்னும் வேதிப் பொருள் (Chemical) மிளகில் நிறைந்து இருப்பதே இதற்கு காரணம்.

உணவில் உள்ள விஷத்தன்மையை முறித்து விடும் ஆற்றல் மிளகிற்கு உண்டு என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள், பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற பழமொழியை சொல்லி வைத்தனர். இப்போதும் நம் கிராமங்களில் பூச்சிகள் மற்றும் தாவர நச்சுக்களை நீக்கும் மிளகு கஷாயம் குடிக்கும் வழக்கம் உள்ளது. அதே போல ரத்தத்தில் சேரும் நச்சுக்களை நீக்கவே, அன்றாடம் உணவில் மிளகு ரசம் சேர்க்கும் பழக்கம் உள்ளது.

கொழுப்பு குறைய

சுக்கு 100 கிராம், மிளகு 100 கிராம், வெந்தயம் 100 கிராம் எடுத்து வெறும் வாணலியில் லேசாக வறுத்து பொடி செய்து, தினமும் காலை, இரவு இரு வேளை, உணவுக்குப் பின் ஒரு டீ ஸ்பூன் மோரில் கலந்து குடித்தால், இரண்டு, மூன்று மாதங்களில் கணிசமான அளவு கொழுப்பு குறைந்து விடும்.

தகவல்:
மூலிகை மணி க.வேங்கடேசன்,
73388 23784

மேலும் படிக்க

தினமும் ஒரு பச்சை வெங்காயம்: நன்மைகளோ ஏராளம்!

பால் குடிப்பதால் சர்க்கரை நோய் வருவதில்லை! ஆய்வில் தகவல்!

English Summary: Medicinal uses of pepper to prevent heart attack!
Published on: 14 July 2021, 08:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now