மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 August, 2022 7:58 PM IST

இந்தியாவின் சிறந்த முதல்வர்களுக்கான கருத்துக்கணிப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 3ம் இடத்தை பிடித்தார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடத்தில் உள்ளார்.

முதல்வர்கள் பட்டியல்

இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் குறித்தக் கருத்துக்கணிப்பை இந்தியா டுடே' பத்திரிகை நடத்தியது. இதில் தற்போது முதல்வர்களாக இருப்பவர்களில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் 78 சதவீத ஆதரவுடன் முதலிடத்தை பிடித்தார். அதனைத் தொடர்ந்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா 63 சதவீதத்துடன் 2வது இடத்திலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் 61 சதவீதத்துடன் 3வது இடத்திலும் இருக்கின்றனர்.

பிஜேபிக்கு ஆதரவு

இதேபோல், தற்போது லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டால், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 286 இடங்கள் கிடைக்கும் என்று இந்தக் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 146 இடங்களிலும், மற்ற கட்சிகள் 111 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரதமராக மோடி

மேலும், லோக்சபா தேர்தல் தற்போது நடத்தப்பட்டால் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு, 53 சதவீதம் பேர் மோடி தான் பிரதமர் பதவிக்கு பொருத்தமாக இருப்பார் என தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு 9 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவளித்துள்ளனர்.

மேலும் படிக்க...

விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

English Summary: M.K.Stalin listed top in the best chief ministers of the country!
Published on: 12 August 2022, 07:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now