Health & Lifestyle

Saturday, 27 November 2021 11:00 AM , by: Elavarse Sivakumar

வயது 35யைக் கடக்கும்போதோ அல்லது அதற்கு முன்பே பிளட் பிரஷர் எனப்படும் உயர் ரத்த அழுத்தம் பலரையும் பதம் பார்த்துவிடுகிறது.

ரத்த அழுத்தம் (Blood pressure)

இதன் காரணமாக அடுத்த சில ஆண்டுகளில், எதற்கெடுத்தாலும், எப்போதும் டென்ஷனாகும் ஆளாக மாறிவிடுகிறார்கள். இதனால், டென்ஷன் பேர்வழி என்றப் பெயரையும் வாங்க வேண்டியது உருவாகிறது.

ஆனால் சில எளிமையான இயற்கை முறைகளைக் கடைப்பிடித்தால், இந்த ரத்த அழுத்தப்பிரச்னையில் இருந்து தப்ப முடியும். பணிச்சுமை உள்ளிட்ட பலக் காரணங்களால் உருவாகும் மன அழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

எளிமையான சில பழக்கங்களைப் பின்பற்றி மருந்து, மாத்திரை உதவி இல்லாமலேயே ரத்த அழுத்தத்தை இயற்கையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இயற்கை முறைகள் (Natural Methords)

யோகா (Yoga)

ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு அதிகரித்தாலே உடலில் ரத்த ஓட்டம் சீராக மாறும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். எனவே ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதற்கு ஏற்ற எளிய பயிற்சிகளான யோகா, மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை செய்யலாம்.

தியானப்பயிற்சி (Meditation)

தினமும் 20 அல்லது 30 நிமிடம் தியானப் பயிற்சி செய்வதன் மூலம் சிறுநீரக நொதி மேம்படுத்தபபடுகிறது. அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை குறைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இனிமையான இசை (Sweet music)

செல்போனில் ஹெட்போன் அணிந்து கொண்டு தனிமையில் 30 நிமிடங்கள் அமைதியான இசையைக் கேட்டால் ரத்த அழுத்தம் சீராவதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைப்பயிற்சி (Walking)

தினமும் குறிப்பிட்ட தூரம் நடைப்பயிற்சி செய்வது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற இயற்கையான வழியாகும். நடப்பதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக அமைவதால், உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் எளிதாக எடுத்துச் செல்லப்பட்டு இதயத்தின் பணி எளிதாகிறது. அதனால் உடலும், மனமும் லேசாக மாறி ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

செம்பருத்தி டீ (Red poppy tea)

அமெரிக்க டப்ட்ஸ் பல்கலைக்கழக (Tufts University) மாணவர்கள் நடத்திய ஆய்வில் ஒரு நாளுக்கு 3 கப் செம்பருத்தி டீ பருகியவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைவது கண்டறியப்பட்டுள்ளது.

நமக்கு விருப்பமான நகைச்சுவை காட்சிகளை கண்டுகளிப்பது, புத்தகம் படிப்பது, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பேசிப் பழகுவது ஆகிய பழக்கங்களை மேற்கொள்ளலாம்.

சிரிங்க

அத்துடன் ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் மனம் விட்டு சிரிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதாலும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். சிரிப்பதால் சுவாசம் மூலம் கூடுதலாக ஆக்சிஜன் ரத்தத்தில் சேருகிறது. அது இதயத்தின் இயக்கத்துக்கு நல்லது.

விளையாடுங்கள்

சமூக அந்தஸ்து, கூச்சம் ஆகியவற்றை விலக்கி விட்டு குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடலாம். அதன் மூலம் மனம் லேசாக மாறி, மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்சினைகள் இயற்கையாக விலகுவதை அனுபவத்தில் உணரலாம்.

மேலும் படிக்க...

அந்த விஷயத்திற்கு ஏற்ற இதமானப் பானங்கள்!

இதயப் பாதிப்புகளைக் குறைக்க இரவு 10 மணி தூக்கமே சிறந்தது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)