Health & Lifestyle

Tuesday, 26 April 2022 07:39 PM , by: R. Balakrishnan

Orange fruit to give peaceful sleep!

ஆரஞ்சுப்பழத்தை தான் நாம் ‘கமலாப்பழம்’ என்று சொல்கிறோம். மஞ்சளும், சிவப்பும் கலந்த நிறத்தில் கமலாப்பழம் அமைந்திருக்கும். இதனுடைய வடிவம் பந்துபோல இருந்தாலும் மேல் பக்கமும், கீழ் பக்கமும் சிறிதளவு தட்டையாக இருக்கும். தோலுக்கும், சுளைக்கும் ஒட்டுதல் இருக்காது. தோலை உரித்தவுடன் சுளையையும் சுலபமாகப் பிரித்து எடுத்து விடலாம். இதன் ருசி தனிப்பட்ட ருசியாகும்.

ஆரஞ்சுப் பழம் (Orange Fruit)

மிகவும் இனிப்பாகவும், புளிப்புச் சுவையைக் கொண்டிருக்கும் இந்த கமலாப்பழத்தில், எண்ணற்ற பலன்கள் உள்ளன.

கமலாப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி1, பி2, சி போன்ற சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் உள்ளன. இதனை உட்கொள்வதால், இரத்தம் ஏராளமாக உடலில் ஊறும், உடல் பலம் பெறும். வைட்டமின்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு நல்லது.

உடல் பலவீனமாக இருப்பவர்கள் கமலாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் புத்துணர்வு பெற்று நல்ல பலம் பெறுவார்கள். இது ஒரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.

தூக்கமின்றி தவிப்பவர்கள் அரை டம்ளர் ஆரஞ்சுப் பழச்சாற்றில், ஒரு தேக்கரண்டியளவு தேனை விட்டுக் கலக்கிச் சாப்பிட்டால் போதும். ஆழ்ந்த தூக்கம் அவர்களை அரவணைக்கும்.

தூக்கத்தை மட்டுமல்ல, துக்கத்திற்கும் சிறந்த பரிகாரத்தைத் தரும் பழம் கமலாப் பழமாகும்.

துக்கத்தைப் போக்கக்கூடிய அற்புதமான பழம் கமலாப்பழம்.

வாழ்க்கையில் விரக்தியடைந்து மனம் நொந்து போனவர்கள் தினந்தோறும் ஒரு கமலாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் போதும்.

மேலும் படிக்க

மூலிகைப் பொடிகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!

நாம் ஏன் சப்போட்டா பழத்தை சாப்பிட வேண்டும்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)