மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 July, 2021 7:22 AM IST
Credit : Vikatan

தக்காளி, கத்திரி உள்ளிட்ட காய்கறிக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படுவதால், விவசாயிகள் பயன்பெறுமாறு தோட்டக்கலைத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீரிய ரக உற்பத்தி (Active type production)

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் என்ற ஊரில் அமைந்துள்ள காய்கறி மகத்துவ மையம் என்ற அரசு நிறுவனத்தின் சார்பில் உயர்ரக தொழில் நுட்பத்துடன் தக்காளி ,மிளகாய், கத்தரி மற்றும் காலிபிளவர் போன்ற பயிர்களை குழித்தட்டு முறையில் வளர்க்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் (All over Tamil Nadu)

இந்த முறைப்படி வளர்க்கப்படும் கன்றுகள், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. குறிப்பாகத் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இந்த கன்றுகள் வழங்கப்படுகின்றன.

முன்பதிவு அவசியம் (Booking is required)

விவசாயிகள் ஒரு ஏக்கர் நிலத்திற்கு முழுமையாக நட தேவையான கன்றுகளை இல்வசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.எனவே தற்போது கிடைக்கும் இந்த வீரிய ரக ஓட்டு வகைக் கன்றுகளைப் பெற விவசாயிகள், தங்கள் பெயரை முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

அனுமதிச்சீட்டு (Ticket)

இதற்கு விவசாயிகள், தங்கள் அருகாமையிலுள்ள ஒன்றிய அலுவலகத்தில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு உதவி தோட்டக்கலை இயக்குனர் இடம் விண்ணப்பம் கொடுத்து அனுமதி சீட்டுக் கொள்ளலாம்.

பிற மாவட்ட விவசாயிகள் (Other district farmers)

இந்த அனுமதிச்சீட்டின் உதவியுடன் இலவசக் கன்றுகளைப் பெற்றுப் பயனடையலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றிய அனைத்து பகுதி மாவட்டங்களும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆண்டு முழுவதும் (Throughout the year)

பொதுவாகப் போக்குவரத்து செலவு பிரச்சனை இல்லை எனும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இதனை பெற்றுக் கொள்ளலாம்.வருடம் முழுவதும் இந்த வகை நாற்றுகள் கிடைக்கும்.

தகவல்

பிரிட்டோ ராஜ்

வேளாண் பொறியாளர்

மேலும் படிக்க...

கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.21¾ கோடி ஒதுக்கீடு!

121 வகை மாம்பழங்களை ஒரே மாமரத்தில் வளர்த்து சாதனை!

English Summary: Organize vegetable seedlings for free on behalf of horticulture!
Published on: 15 July 2021, 07:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now