மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 August, 2019 5:39 PM IST

மூலிகைகளின் ராணி துளசி. ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்படும் மூலிகை செடி. இதன் இலைகள் மட்டுமன்றி பூக்களிலும் எண்ணற்ற நண்மைகள் நிறைந்துள்ளன. தென் இந்திய வீடுகளில் அதிகம் வளர்க்கப்படும் செடிகளில் துளசியும் இடம் பெறும். துளசியை கொண்டு    உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம்.

இயற்கை வைத்தியம்

இருமல்

இருமல், சளி, ஜலதோஷம் உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக கிடைக்கும் அருமருந்து துளசி. இருமலைக் கட்டுப்படுத்தும் யூஜினால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதில் உள்ளன. உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுவதுடன், உடலில் உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதற்கு உண்டு.

இரத்த அழுத்தம்

துளசி இலை, முற்றிய முருங்கை இலைகளை சம அளவு எடுத்து பின் சாறு எடுத்து, 50 மில்லி சாற்றில் , 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இதை சாப்பிடும் காலத்தில் உப்பு, புளி, காரம் குறைக்க வேண்டும். 

காய்ச்சல்

10 துளசி இலையுடன் 5 மிளகை நசுக்கி, 2 டம்ளர் நீர்விட்டு, அரை டம்ளர் சுண்டும்படி காய்ச்சி, குடித்து விட்டு, சிறிது எலுமிச்சை சாறை அருந்தி, கம்பளிக் கொண்டு உடம்பு முழுக்க மூடிக்கொண்டு படுத்தால் மலேரியா காய்ச்சல் கூட படிப்படியாக குறையும்.

மன அழுத்தம்

தினமும் துளசியை சாப்பிட்டு வர அதில் உள்ள அடாப்டோஜென் மன அழுத்தத்தை குறைக்கும்.

இதய நோய்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிட்டு வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வராமல் தடுக்கிறது.

வாய் பிரச்சனை

ஈறுகளில் எந்த பிரச்சனை இருந்தாலும் துளசியை பொடி செய்து அத்துடன் சிறிது கடுகெண்ணை சேர்த்து பேஸ்ட் செய்து, ஈறுகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் வாய் சம்பத்தப்பட்ட பிரச்சனை நீங்கும்.

கண்கள்

கண்களில் அரிப்பு, எரிச்சல், புண் இருந்தால் துளசியின் சாற்றை கண்களில் ஊற்றினால் விரைவில் குணமாகும்.

நீரிழிவு

வெறும் இலைகள் மட்டும் சாப்பிட்டு வந்தால் போதும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி , இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு, நீரிழிவை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

சிறுநீரக கற்கள்

துளசி சாறுடன் சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தால் குணமாகிவிடும்.

தொண்டை புண்

துளசியை நீரில் கொதிக்க வைத்து மிதமான சூட்டில் வாயை கொப்பளித்தால் தொண்டைப் புண் குணமாகிவிடும்.

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: Queen of Herbal plants! 10 Awesome Health benefits of Tulsi
Published on: 16 August 2019, 05:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now