இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 4 November, 2021 5:58 PM IST
Credit : Tamil Webdunia

உடல் சூடுதான் பலவித நோய்களுக்கு அடிப்படை என்பதால், எண்ணெய்க் குளியல் என்பது நம்முடையக் கலாச்சாரத்தில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

நோய்க்கு காரணம்

வாதம், பித்தம், கபம் ஆகியவற்றில் ஒன்று அதிகரித்தாலோ, குறைந்தாலோ, நம் உடலில் நோய்கள் கிரகப்பிரவேசம் செய்து வசதியாக வாழத் துவங்கிவிடும். அதனால்தான் நமது கலாச்சாரத்தில் சத்தான உணவு முறை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை போன்றவற்றுடன், எண்ணெய்க் குளியலும் அடக்கம்.

எண்ணெய்க் குளியல் (Oil bath)

ஆரோக்கியப் பிரச்சினையிலிருந்து உடலைப் பராமரிப்பதற்கு எண்ணெய்க் குளியல் சிறந்த முறையாகும்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் வாத, பித்த, கப தோஷங்கள் சீராகும். உடல் உள் உறுப்புகளின் இயக்கம் சீராகும். உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தவும் முடியும்.

லிம்ஃபாட்டிக்ஸ் எனப்படும் நிணநீர்க் கோளமே உடலில் உள்ள செல்களுக்கு ஊட்டம் அளிக்கும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சருமத்தின் வழியாக எண்ணெய் உட்கிரகிக்கப்பட்டு, இந்த நிணநீர்க் கோளத்தை அடைந்து உடலுக்கு நன்மை அளிக்கிறது.

நன்மைகள் (Benefits)

  • தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது மூளைப்பகுதியில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு, உடல் முழுவதும் வெப்பத்தையும், ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

  • மன அழுத்தத்தைக் குறைத்து உடல் உள் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்பட உதவும்.

  • முடி உதிர்வைக் குறைக்கும்.

  • பார்வைத் திறனை மேம்படுத்தும்.

  • சருமத்தை பொலிவாக்கும்.

  • உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.

  • மூட்டுக்களின் இணைப்பில் உள்ள தேய்மானத்தை குறைக்கும்.

குளிக்கும் முறை (Bathing method)

  • பண்டிகை நாட்கள், முக்கிய நிகழ்வுகள் தவிர வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.

  • உச்சி முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து, அரை மணி நேரம் வரை காலை நேர இளம் வெயிலில் நின்று, பின் மிதமான சுடு தண்ணீரில் குளிக்கலாம்.

  • உடலில் தேய்க்கும்போது மூட்டுக்களில் வட்டவடிவிலும், உடல் உறுப்புகளில் மென்மையாகவும் தேய்க்க வேண்டும்.

  • எண்ணெய்க் குளியலுக்கு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யைப் பயன்படுத்தலாம்.

  • எண்ணெயுடன் இரண்டு பூண்டு, ஐந்து மிளகைச் சேர்த்து முப்பது வினாடிகள் வரை அடுப்பில் சூடுபடுத்தித் தேய்த்துக் குளித்தால் குளிர்ச்சியால் ஏற்படும் உடல் உபாதைகளைத் தவிர்க்கலாம்.

செய்யக் கூடாதவை (Things not to do)

எண்ணெய் தேய்த்துக் குளித்த தினம் அன்று பகல் வேளையில் தூங்கக் கூடாது.
குளிர்ந்த உணவு, குளிர்பானம், குளிர்ந்த நீர், குளிர்ச்சியை ஏற்படுத்தும் வாழ்வியல் முறை போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க...

தினமும் கீரை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் - மக்களே உஷார்!

பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்- தீபாவளியையொட்டி விற்பனை!

English Summary: Refreshing traditional oil bath!
Published on: 03 November 2021, 11:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now