மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 November, 2018 5:00 PM IST
  1. ஊட்டச் சத்து நிறைந்த, திட உணவு உட்கொள்ள பல்வேறு உணவு வகைகளைத் தேர்வு செய்தல்.
  2. கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் கூடுதல் நீரும் உணவும், அதிக கவனமும் தேவை.
  3. பிறந்த குழந்தைக்கு 4-6 மாதத்திற்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம்.
  4. குழந்தைக்கு திட உணவுகளை 4-6 மாதத்தில் இருந்து துவங்க வேண்டும்.
  5. குழந்தைகளும், விடலைப் பருவத்தினரும் நல்ல உடல் நலனைப் பெறவும் நோய் எதிர்ப்புசக்திக்கும் , போதுமான அளவு ஊட்ட உணவு உட்கொள்ள வேண்டும்.
  1. கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உண்வில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
  2. சமையல் எண்ணெய்கள் மற்றும் வனஸ்பதி / நெய் / வெண்ணெய் ஆகியவற்றைக் குறைவாகப் பயன்படுத்தவும்.
  3. உடல் பருமன் மற்றும் அதிக எடையைத் தவிர்க்க அதிகமாக உணவு உட்கொள்ளக் கூடாது. உடல் பயிற்சி செய்து உடல் எடையைப் பராமரிக்கவும்.
  4. மிதமான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  5. சுத்தமான, பாதுகாப்பான உணவை உட்கொள்ளவும்.
  6. சுகாதாரமான உணவுப் பழக்க வழக்கங்களையும் சமையல் முறைகளையும் பின்பற்ற வேண்டும்.
  7. அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மிதமான அளவு பானங்கள் குடிக்கவும்.
  8. பதப்படுத்தப்பட்ட, டின்னில் அடைத்த உணவுபொருட்களை கவனமாக உட்கொள்ளவும். குறைவான அளவு சக்கரையை சேர்க்கவும்.
  9. வயதானவர்கள், தங்களை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம்.

ஊட்டம் நிறைந்த திட உணவை, பல்வேறு உணவு பொருட்கள் மூலம் தேர்வு செய்ய வேண்டும்

  • நல்ல முறையில் நிலையான வாழ்வு வாழ ஊட்டச்சத்து அடிப்படைத் தேவை.
  • பலவகை உணவுமுறை, வாழ்கைக்கு மட்டுமின்றி, ஊட்டச்சத்திற்கும், உடல் நலத்திற்கும் அவசியம்.
  • அனைத்து உணவு வகைகளில் இருந்து தயார் செய்யப்படும் திட உணவில், தேவையான அளவு ஊட்டச்சத்து கிடைக்கிறது.
  • அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்த தானியங்கள், கீரைகள், கிழங்கு சிறுதானியங்கள் மற்றும் பயறுவகைகளில் அதிகமாக உட்கொள்ளவும் அதிகமான அளவு ஊட்டச்சத்து கிடைக்கிறது.
  • நல்ல தரமான புரதம் மற்றும் கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) நிறைந்த பாலை, கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான திட்ட உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் மற்றும் முந்திரி பருப்புகளில் அதிக அளவு சக்தி உள்ளது.
  • முட்டை, மாமிச மீன், முட்டை, இறைச்சி உணவுகள் மற்றும் மீன் போன்ற திட உணவின் தரத்தை உயர்த்துகின்றன. எனினும் சைவ உணவு உண்பவர்கள் தானியங்கள், பயறுகள், கீரைகள், கிழங்கு மற்றும் பால் பொருட்களில் இருந்து கிடைக்கும் அனைத்து வகை ஊட்டச்சத்துகளையும் பெறலாம்.
  • காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின் மற்றும் தாது உப்புசத்துளும் உள்ளன.
  • வயது, உடல்நிலை, வேலை ஆகியவற்றிற்கேற்ப உணவைத் தேர்வு செய்யவும்.
  • தானியங்கள், பயறுகள் மற்றும் கீரைகள் ஆகியவற்றைக் கலந்து உண்ணவும். சக்தி பற்றாக்குறையை ஈடுசெய்ய, வெல்லம் / சக்கரை அல்லது சமையல் எண்ணெய் சேர்க்கவும்.
  • அதிக அளவு, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்க்கவும்.
  • கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் குழந்தைகளுக்கான திட்ட உணவில், பால், முட்டை மற்றும் மாமிச உணவுகளை சேர்க்கவும்.
  • வயது முதிர்ந்தோர்க்கு குறைந்த அளவு கொழுப்புள்ள புரதம் நிறைந்த, மீன், பயறுகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் ஆகியவற்றைச் சேர்க்கவும்
  • நல்ல சுகாதார உணவு பழக்க வழக்கங்களையும் முறையான உடற் பயிற்சியையும் பின்பற்றவும்.
English Summary: Selection of nutrient rich foods
Published on: 16 November 2018, 04:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now