மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 July, 2021 2:56 PM IST
jamun.

நாவற்பழத்தின் பக்க விளைவுகள்: கோடை காலத்தில் யார்தான் நாவற்பழத்தை சாப்பிட விரும்பமாட்டார்கள். இந்த அடர் ஊதா வண்ண பழம் ஊட்டச்சத்தின் பவர் ஹவுஸ் என்றும் அழைக்கப்படுகிறது. சுவை நிறைந்த, இந்த பழத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவ முறைகளில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுத்துகிறார்கள். இதனை உட்கொள்வதால் உடலில் காணப்படும் பல கொடிய நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. நாவற்பழம் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடலில் இரத்தத்தின் பற்றாக்குறையையும் அதிகரிக்கிறது. இரத்தத்தில் இருக்கும்  சர்க்கரையும் கட்டுப்படுத்தப்படுகிறது. இது தவிர, நாவற்பழத்தை உட்கொள்வதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். இதில் பல குணங்கள் நிறைந்திருந்தாலும், சிலர் நாவற்பழத்தை உட்கொள்வதற்கு ஏற்றதல்ல. மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே நாவற்பழத்தை உட்கொள்ள வேண்டும். 

  1. இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை

உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நாவற்பழம் உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆயுர்வேதத்தில், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நாவற்பழம் உணவில் சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் பல முறை மக்கள் இரத்த சர்க்கரையை விரைவாகக் கட்டுப்படுத்த தேவையானதை விட அதிகமாக உட்கொள்ளத் தொடங்குகிறார்கள், இது குறைந்த இரத்த அழுத்தத்திற்கு காரணமாகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதை உட்கொள்வதற்கு முன், தயவுசெய்து மருத்துவரை அணுகவும்.

  1. மலச்சிக்கல் பிரச்சினை

மலச்சிக்கல் பிரச்சினை உங்களுக்கு இருக்கிறதானால் , நாவற்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதை அதிகமாக உட்கொள்வது சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சினையை ஏற்படுத்தும்.

  1. முகப்பருவால் ஏற்படும் தொந்தரவு

உங்கள் சருமம் எண்ணெய் மிக்கதாக இருந்தால், உங்கள் முகத்தில் முகப்பரு வந்துகொண்டே இருக்கும். நீங்கள் அதிகமாக நாவற்பழத்தை சாப்பிட்டால் உங்கள் முகத்தில் அதிக முகப்பரு பிரச்சினை ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

  1. குமட்டல் ஏற்படுவது

நாவற்பழம் சாப்பிட்ட பிறகு வாந்தி வருவதாக பலர் புகார் கூறுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், ஆரம்பத்தில் நீங்கள் இரண்டு அல்லது மூன்று நாவற்பழங்களை உட்கொள்ள வேண்டும். இதைச் செய்த பிறகு  எந்தவித மோசமான விளைவையும் ஏற்படுத்தவில்லை என்றால், நாவற்பழத்தை சாப்பிடுங்கள்.

  1. அறுவை சிகிச்சை

உண்மையில் நாவற்பழம் இரத்த சர்க்கரையின் அளவை பாதிக்கிறது, மேலும் இது அழுத்தத்தை குறைக்கவும் உட்கொள்ளப்படுகிறது. எனவே, அறுவை சிகிச்சையின் போதும் அதற்குப் பின்னரும் அதைத் தவிர்க்க வேண்டும். ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமானால், அறுவை சிகிச்சைக்கு குறைந்தது 2 வாரங்களுக்கு முன்னதாக நாவற்பழம் உட்கொள்வதை நிறுத்துங்கள்.

  1. இரத்த உறைவு

உடலில் தடிப்பு மற்றும் இரத்த உறைவு தொடர்பான ஏதேனும் சிக்கல் இருந்தால், நீங்கள் நாவற்பழம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது உங்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம்.

  1. வாதம்

நாவற்பழம் சாப்பிடும் பொழுது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் இருந்தால், நாவற்பழம் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

மேலும் படிக்க

நாவல் பழம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் கோடைகால பழமாகும், இது பல ஆரோக்கிய நன்மைகளையும், இந்த பருவத்திற்கு ஏற்ற சுவையையும் அளிக்கிறது.

English Summary: Side Effects Of Jamun
Published on: 07 July 2021, 02:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now