Health & Lifestyle

Monday, 09 May 2022 09:36 PM , by: Elavarse Sivakumar

உணவில் இனிப்பைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது சரியே. ஆனால் அதனை நம் சாப்பாட்டுக்குப் பிறகு சாப்பிடுவது மிகப் பெரிய தவறு. இதைத் தெரிந்துகொண்டு, தவற்றைச் சரிசெய்து முடிவு எடுத்துவிட்டால், உடல் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஏனெனில், இனிப்புப் பொருளை முதலில் சாப்பிடுவது செரிமான சுரப்புகளின் ஓட்டத்தை செயல்படுத்துகிறது.

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குச் சென்றால், சாப்பாடு பரிமாறும்போது, இனிப்பும் வழங்கப்படும். இந்த விஷேசங்களில் சாப்பிடும் உணவுகளுக்கு பின் சிறிது இனிப்பு இல்லாமல் நம்மில் பலருக்கு உணவு திருப்தியடையாது. ஆனால், அது போன்ற ஹெவியான சாப்பாட்டிற்கு பிறகு இனிப்பு சாப்பிடுவது நல்லதல்ல. மாறாக, சிறந்த செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்காக நமது உணவை இனிப்புகளுடன் தொடங்க வேண்டும் என ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

இனிப்புகளின் நேரம் மற்றும் உணவின் போது விழிப்புணர்வு நிலை ஆகியவை ஓஜஸ் (உயிர்) அல்லது அமா (நச்சுத்தன்மை) ஆகியவற்றை அதிகரிக்கின்றன.
அதுபோல, ஒருவரின் உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவது அவசியம். பின்வரும் விதிகள் ஆயுர்வேதத்தின் பண்டைய ஞானத்தைத் தட்டவும், இனிப்புகள் மூலம் ஆரோக்கியம், உயிர்ச்சக்தி மற்றும் ஆற்றலை உருவாக்க அதைப் பயன்படுத்துவதற்கும் வழிகாட்டியாக இருக்கும்.

உணவுக்கு முன் ஏன்?

  • இனிப்பு ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும்.

  • இனிப்புப் பொருளை முதலில் சாப்பிடுவது செரிமான சுரப்புகளின் ஓட்டத்தை செயல்படுத்துகிறது.

  • உணவுக்குப் பிறகு இனிப்புகளை உட்கொள்வதன் மூலம், செரிமானத்தை மெதுவான நிலைக்குக் கொண்டு சென்றுவிடுகிறது.

  • உணவின் தொடக்கத்தில் இனிப்பு சாப்பிடுவது உணவுக்கு கூடுதல் சுவை தரும்.

  • இனிப்பைக் கடைசியில் சாப்பிடுவது செரிமான நெருப்பை அணைக்கும்.

  • மேலும், அமில சுரப்பு காரணமாக நொதித்தல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும்.

உங்கள் உணவை சர்க்கரையுடன் முடிப்பது வாயு உருவாவதற்கும் வீக்கத்திற்கும் வழிவகுக்கும்.

தகவல்
டாக்டர்.நித்திகா கோலி
ஆயுர்வேத நிபுணர்

மேலும் படிக்க...

ஊறவைத்த முந்திரியின் எக்கச்சக்க நன்மைகள்!

வாத நோய்க்கு வித்திடும் உருளைக்கிழங்கு- மக்களே உஷார்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)