Health & Lifestyle

Monday, 16 August 2021 10:36 AM , by: Aruljothe Alagar

Jamun's Studing medicinal properties

இந்த ஊதா நிற பழத்தை சாப்பிடுவது எவ்வளவு இனிமையானதோ, அவ்வளவு கசப்பு தன்மையும் உள்ளது  என்பது உங்களுக்குத் தெரியுமா. இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாவற்பழம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். ஆம், பல மருத்துவ குணங்கள் மறைக்கப்பட்டிருக்கும் பழம். நாவற்பழம் ஒரு ஆயுர்வேத மூலிகை, அதனை சாப்பிடுவது பல நோய்களை குணப்படுத்துகிறது.

நாவற்பழத்தின் இலைகள் மட்டுமல்ல, அதன் மரத்தின் பட்டை, பழத்தின் கொட்டைகளும் மிகவும் நன்மை பயக்கும். உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் இந்த நன்மைகள் பற்றி இதில் தெரிந்துகொள்ளுங்கள். நாவற்பழத்தின் நன்மைகளை அறிய மேலும் படிக்கவும்.

நாவற்பழத்தில் காணப்படும் சத்துக்கள்

  • இரும்பு
  • கால்சியம்
  • புரதம்
  • ஃபைபர்
  • கார்போஹைட்ரேட்டுகள்

பருக்கள் அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும்

பருக்கள் பிரச்சனையால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், அதன் இலைகளின் சாற்றை உங்கள் முகத்தில் தடவலாம். இது உங்கள் முகத்தில் எண்ணெய் மற்றும் சரும பிரச்சனைகளைத் தடுக்கிறது.

கண்களுக்கு நன்மைகள்

உங்களுக்கு கண்கள் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், நாவற்பழ இலைகளை தண்ணீரீல் கொதிக்க வைத்து கண்களைக் கழுவுங்கள். இது உங்கள் கண்கள் தொடர்பான பிரச்சனையை நீக்கும். ஒரு கஷாயம் தயாரிக்க, 15-20 மிருதுவான இலைகளை 400 மிலி தண்ணீரில் கொதிக்கவேண்டும், இந்த காபி தண்ணீரில் நான்கில் ஒரு பங்கு இருக்கும்போது, ​​அதை குளிர்வித்து கண்களை கழுவ வேண்டும்.

மூல பிரச்சனைகளுக்கு நாவற்பழம்

உங்களுக்கு மூலநோய் போன்ற பிரச்சனை இருந்தால், இதற்காக நீங்கள் 250 மில்லி பசும்பாலில் 10 கிராம் நாவற்பழம் இலைகளை கலந்து குடிக்கலாம், இது பைல்ஸ் பிரச்சனையை அகற்றுவதில் பெரும்பங்கு வகுக்கிறது. ஒரு நாளைக்கு மூன்று முறை தொடர்ச்சியாக 7 நாட்கள் குடித்து வந்தால், மூலப் பிரச்சனையால் ஏற்படும் இரத்தப்போக்கை நிறுத்திவிடும்.

கற்கள் பிரச்சனைகளுக்கு நாவற்பழம்

உங்களுக்கு கற்கள் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், பழுத்த நாவற்பழங்களை சாப்பிட வேண்டும். இதனுடன், நாவற்பழச் சாறுடன் 10 மிலி சிறிது கல் உப்பு கலக்கவும். சில வாரங்களுக்கு தினமும் 2-3 முறை குடிப்பதால் சிறுநீர் பாதையில் உள்ள கற்களை உடைத்து சிறுநீருடன் கற்கள் வெளியே வந்து குணமடைகிறது.

சர்க்கரை வியாதிக்கு நாவற்பழம்

சர்க்கரை வியாதியால் அவதி படுபவராக இருந்தால், நீங்கள் நாவற்பழத்தை கொட்டைகளை அரைத்து பொடியாக செய்து உட்கொள்ளலாம்.

மேலும் படிக்க...

நாவற்பழத்தில் இருக்கும் கேடு விளைவிக்கும் குணங்கள்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)