Health & Lifestyle

Thursday, 25 October 2018 05:26 PM
  • சாப்பிடும்போது சாப்பாட்டைத் தவிர வேறு சிந்தனைகள் வேண்டாம். உணவைப் பற்றிச் சிந்திப்பது உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கும். செரிமானம் சீராகும்.
  • சாப்பாட்டுக்கு முன் சூப் அருந்துங்கள். அது உங்கள் வயிற்றை நிரப்பும். அதிகம் சாப்பிடுவதைத் தடுக்கும். 
  • சாப்பாட்டுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக கிரீன் டீ அல்லது பால் சேர்க்காத டீ குடிப்பது உங்கள் வயிற்றை செரிமானத்துக்குத் தயார்ப்படுத்தும்.
  • சாப்பிடுவதற்கு முன்னரும் பின்னரும் நிறைய தண்ணீர் குடியுங்கள். இடையில் வேண்டாம்.
  • இரவில் செரிமானத்துக்கு எளிதான உணவுகளை மட்டுமே உண்ணுங்கள்.
  • உணவில் நிறைய புரதம் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள். அது சீக்கிரமே பசி உணர்வு எழுவதைத் தடுக்கும்.
  • மாவுச்சத்தும், மசாலாக்களும், எண்ணெயும் நிறைந்த உணவுகள் செரிமானத்தைக் கடினமாக்குவதுடன் தூக்கத்தையும் கெடுக்கும்.
  • சாப்பிட்ட உடனே தூங்கச் செல்ல வேண்டாம். தாமதமாகச் சாப்பிடுவதும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். நெஞ்செரிச்சலை உருவாக்கும்.
  • ஒவ்வொரு வேளையும் நார்ச்சத்துள்ள உணவுகள் அவசியம் இடம்பெற வேண்டும். அவை மலச்சிக்கலைத் தவிர்க்கும்.
  • எப்போதும் சூடான உணவுகளையே சாப்பிடவும். உணவின் சூடு உங்கள் வயிற்றுத் தசைகளைத் தளர்த்தும்.
  • மூன்று வேளை வயிறுமுட்டச் சாப்பிடுவதற்கு பதில் ஆறு வேளை குறைந்த அளவில் சாப்பிடுவது உங்கள் ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
  • சாப்பிடும்போது கவலைகளை ஓரங்கட்டிவிடுங்கள். கவலையாக இருக்கும்போது உங்களையும் அறியாமல் நீங்கள் அதிகம் சாப்பிடுவீர்கள்.

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)