மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 May, 2021 6:43 AM IST

தமிழகம் முழுவதும் நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கொரோனாத் தடுப்பு (Corona prevention)

கொரோனாத் தொற்றுப் பரவலைத் தடுக்கத் தமிழக அரசுப் போர்க்கால அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது.

முதலமைச்சர் ஆலோசனை (Chief Minister's advice)

இதன் ஒருபகுதியாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவாசியப் பொருட்களை விநியோகிப்பதுத் தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

காய்கறித் தடையின்றி விநியோகம் (Unrestricted supply of vegetables)

நகரப்பகுதிகளை போலக் கிராமப்பகுதிகளிலும் காய்கறி விநியோகம் தடையின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

வேளாண்துறை அமைச்சர் (Minister of Agriculture)

அவரைத் தொடர்ந்து பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியதாவது, தமிழகம் முழுவதும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் காய்கறிகள் பழங்கள் விநியோகம் செய்யப்படுவதாகவும், கிராமங்களில் மூன்று சக்கர வாகனங்கள் மூலம் காய்கறிகள் விநியோகம் செய்யப்படும்.

வாகனங்களில் விற்பனை (Sale in vehicles)

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் நாளில் சென்னையில் மட்டும் 1,670 வாகனங்களில் 1,400 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது.

குறைந்த விலையில் (At a low price)

பிற மாவட்டங்களில் மட்டும் 4,626 மெட்ரிக் டன் காய்கறிகள் 6,296 வாகனங்கள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பைத் தவிர்க்க (To avoid harm)

விவசாயிகளின் விளைப்பொருட்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேளாண்துறை அதிகாரிகள் மூலமாக நேரடியாகக் கொள்முதல் செய்து தேவைப்படக்கூடிய இடங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவை விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தட்டுப்பாடு அபாயம் இல்லை (There is no risk of shortage)

தமிழகம் முழுவதும் 23,900 ஹெக்டேர் பரப்பில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விளைவிக்கப்பட்டு வருவதால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் படிக்க....

வேளாண் இயந்திரங்களை வாடகையின்றி இலவசமாக பெற விண்ணப்பிக்கலாம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!

மீனவர்களுக்கு ரூ. 5000 நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!

வேளாண் பணிகளை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை: விவசாயிகளுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!

English Summary: Vegetables and fruits sold in over 13,000 vehicles!
Published on: 26 May 2021, 06:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now