Health & Lifestyle

Friday, 30 June 2023 04:30 PM , by: Deiva Bindhiya

Venus is going to enter Leo and what will it bring!

ஜாதகத்தில் சுக்கிரன் சுபமாக இருக்கும் போது, ​​அந்த நபருக்கு சகல வசதிகளும், வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும். மேலும், வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் பஞ்சம் இருக்காது. இந்நிலையில் சுக்கிரன் ஜூலை மாதம் பெயர்ச்சி ஆக இருக்கிறார். அதனால் அதிர்ஷ்டத்தை பெறப் போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.

சுக்கிரன், ஜூலை 7 ஆம் தேதி சிம்ம ராசியில் பிரவேசிக்கப் போகிறார். சிம்ம ராசியின் அதிபதி சூரியன் என்று சொல்வதுண்டு. அத்தகைய சூழ்நிலையில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி, கடக ராசியில் வக்ர பெயர்ச்சி ஆகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்க உள்ளது. இந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக அமையப் போகிறது. உடல் இன்பங்களின் பலனைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுமட்டுமின்றி பணியிடத்திலும் பதவி உயர்வு முதலியவற்றையும் காணலாம். இந்த நேரத்தில் விலையுயர்ந்த பொருளையும் வாங்கலாம். ரியல் எஸ்டேட், உணவு போன்ற வியாபாரம் செய்பவர்களுக்கு, இந்த காலகட்டம் சாதகமானது.

மேலும் படிக்க: வேளாண் வணிக திருவிழா: சந்தை வாய்ப்புகளை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு

ஜோதிட சாஸ்திரப்படி, சிம்ம ராசியில் சுக்கிரனின் பிரவேசம் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். வேலை, தொழில், வியாபாரம் என அனைத்திலும் ஆதாயம் பெறுவீர்கள். நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணம் பெற புதிய வழிகள் திறக்கப்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பது சாதகமாக இருக்கும். உங்கள் ஆளுமை மேம்படும். அதே நேரத்தில், எடுத்த அனைத்து வேலைகளிலும் நல்ல பலன்கள் காணப்படும். எந்த வேலையில் கை வைத்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்பு வரலாம்.

மேலும் படிக்க:

பான்-ஆதார் இணைக்கவிட்டால்: பான் கார்டு செயல்படாது

வேளாண் வணிக திருவிழா: சந்தை வாய்ப்புகளை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)