மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 April, 2022 9:45 PM IST
Garden to green the walls of the house...

தூத்துக்குடியை சேர்ந்த டி.விஜய் மணி (29) என்பவர் செங்குத்து தோட்டம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், தூத்துக்குடி வஉசி கல்லூரியில் விலங்கியல் துறையில் பிஎஸ்சி முடித்தார். தற்போது செங்குத்து தோட்டக்கலை தொழில் அவரை இளம் தொழிலதிபராக மாற்றியுள்ளது.

மண்புழு உரம்:

கல்லூரியில் படிக்கும் போது, மண்புழு உரம் தயாரிப்பது துணை பாடமாக கற்பிக்கப்பட்டது. அப்போது, வீட்டில் மண்புழு உரம் தயாரித்து, சைக்கிள் ஓட்டி, வீடு வீடாக விற்பனை செய்தேன். அப்போது சிலர் வீட்டுத்தோட்டம் அமைத்துத் தரும்படி கேட்டனர்.

மண்புழு உரம்:

கல்லூரியில் படிக்கும் போது, மண்புழு உரம் தயாரிப்பது துணை பாடமாக கற்பிக்கப்பட்டது. அப்போது, வீட்டில் மண்புழு உரம் தயாரித்து, சைக்கிள் ஓட்டி, வீடு வீடாக விற்பனை செய்தேன். அப்போது சிலர் வீட்டுத்தோட்டம் அமைத்துத் தரும்படி கேட்டனர்.

இப்படித்தான் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைத்து அதை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். தற்போது 26 வீட்டுத்தோட்டங்கள், மொட்டை மாடிகள், பால்கனிகள் அமைத்து பராமரித்து வருகிறேன். அதேபோல் சென்னையிலும் பெங்களூரிலும் தலா 4 வீடுகளில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறேன்.

இயற்கை விவசாயம்:

தோட்டம் அமைக்க ரூ.150க்கு பை வாங்குவேன். இதில் பை, உரம், தேங்காய் நார் கழிவுகள், விதைகள் அடங்கும். பழுதடைந்த செடிகளுக்கு உரமிட்டு மாற்றுவதற்கு பராமரிப்புக்கு ரூ.500 வசூலிக்கிறேன். காய்கறிகள், எலுமிச்சை, கொய்யா, சப்போட்டா, மாதுளை, நெல்லி போன்றவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்கிறேன்.

அழகு தாவரங்கள்:

தூத்துக்குடியில் 5 வீடுகளில் செங்குத்து தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறேன். இதற்காக ஓசூர், புனே போன்ற இடங்களில் இருந்து அலங்கார செடிகளை கொண்டு வருகிறேன். பிளாஸ்டிக் பெட்டிகளால் சுவர்களை வடிவமைத்து செடிகள் வளர்க்கப்படுகின்றன. சொட்டுநீர் அமைப்பில் தண்ணீர் வழங்கப்படுகிறது. பலர் தங்கள் வீடுகளுக்குள் செங்குத்து தோட்டங்களையும் அமைத்துள்ளனர். சிலர் சுவர் முழுவதையும் பச்சையாக மாற்றச் சொல்வார்கள். அதன்படி கட்டணத்தை நிர்ணயம் செய்வேன்.

இளைஞர்களுக்கான வேலை:

என்னிடம், 7 இளைஞர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை கொடுக்கிறேன். அதுமட்டுமின்றி, மாதம் ரூ.40,000 வரை சம்பாதிக்கிறேன். 2016-ம் ஆண்டு எனக்கு வஉசா கல்லூரி சார்பில் இளம் தொழில்முனைவோர் விருது வழங்கப்பட்டது. இந்தத் தொழிலை விரிவுபடுத்தி அதிக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதே எனது லட்சியம். இவ்வாறு விஜய் மணி கூறினார்.

மேலும் படிக்க:

1 லட்சம் தேக்கு மரக்கன்றுகள் நடும் பணி! பசுமையாக்கும் திட்டத்தில் வனத்துறை ஏற்பாடு!

அடர்வனம் அமைக்கும் திட்டம் - இணைய அழைப்பு!

English Summary: Vertical garden to green the walls of the house!
Published on: 20 April 2022, 09:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now