மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 January, 2022 7:54 AM IST

கொரோனா பாதிப்பு மன உளைச்சலை மட்டுமல்ல பல்வேறு நோய்களையும் பரிசாக வழங்கியுள்ளது. அப்படி கொரோனா பாதிப்பால் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டப் பெண்ணை, வயாக்ராமருந்து கொடுத்துக் காப்பாற்றியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

கொடூரக் கொரோனா (Cruel corona)

கொரோனா உலக நாடுகளை உலுக்கி எடுத்தது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் பரலோக ராஜியத்தை அடைந்தார்கள். லட்சக்கணக்கானோர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மீண்டனர். 

அப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கோமா நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு அதிர்ஷ்டவமாக உயிர்தப்பி, இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த செவிலியர் மோனிகா அல்மேடா . செவிலியரான இவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களைம் போட்டுள்ளார். அவருக்கு கடந்த அண்மையில் கொரோனா பரிசோதனை நடத்தபட்டது. அப்போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது இதை தொடர்ந்து அவர்மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

தீவிர சிகிச்சை (Intensive treatment)

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, மோனிகா நான்கு நாட்களில் சுவை மற்றும் வாசனையை இழந்தார்.அவருடைய ஆக்ஸிஜன் அளவு குறைந்தது. உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். பல நாட்காள கோமாவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

கோமா

இந்த நிலையில் ஒரு சோதனை முயற்சியாக,மருத்துவர்கள் அவருக்கு அதிக அளவு வயாக்ரா மருந்து கொடுத்து உள்ளனர்.இதன் பிறகு மோனிகாவில் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தென்பட்டது. என்ன ஆச்சரியம் கோமாவில் இருந்த மோனிகாவிற்கு, இந்த மருந்து காரணமாக, து 28 நாட்களுக்குப் பிறகு சுயநினைவு திரும்பியது.

டிஸ்சார்ஜ் (Discharge)

அவர் சுயநினைவு திரும்பிய பிறகு, லிங்கன் கவுண்டி மருத்துவமனையின் மருத்துவர்கள் கோமாவில் வைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு அவருக்கு வயாக்ரா மருந்து வழங்கப்பட்டதை வெளிப்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து மோனிகா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் விடுமுறையை அவர் கழிக்க முடிந்தது. இருப்பினும், அவர் முழுமையாக குணமடைய பல மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காற்று அலைகள் திறப்பு

இதுகுறித்து செவிலியர் மோனிகா கூறியதாவது:-
நிச்சயமாக வயாக்ராதான் என்னைக் காப்பாற்றியது. 48 மணி நேரத்திற்குள் அது என் காற்று அலைகளைத் திறந்ததால், என் நுரையீரல் செயல்பட ஆரம்பித்தது. மருந்து எவ்வாறு செயல்படுகிறது என்றால், அது உங்கள் இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. எனக்கு ஆஸ்துமா உள்ளது, என் காற்றுப் பைகளுக்கு கொஞ்சம் உதவி தேவை.

நான் குணமடைந்தவுடன் மருத்துவ ஆலோசகர் ஒருவர் என்னிடம் உங்களை காப்பாற்றியது வயாக்ரா தான் என்று கூறினார். நான் சிரித்தேன், அவர் கேலி செய்கிறார் என்று நினைத்தேன், ஆனால் பின்னர்தான் தெரியவந்தது, வயாகராதான் எனக்கு மருந்தாக செலுத்தப்பட்டது என்பது.

உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இப்போது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க வயாக்ரா மருந்தைப் பயன்படுத்த முடியுமா என்று பரிசோதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

அடுத்து வருகிறது மிக மிக ஆபத்தான வைரஸ்- விஞ்ஞானி எச்சரிக்கை!

நடுங்கும் குளிரில் இருந்து தப்பிக்க- இந்த 4 பொருட்கள் மட்டும் போதும்!

English Summary: Viagra - The woman who overcame her coma in 28 days!
Published on: 12 January 2022, 07:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now