Health & Lifestyle

Saturday, 03 July 2021 06:24 AM , by: Elavarse Sivakumar

Credit : Pixabay

விருதுநகர் மாவட்டத்தில், குல்லூர்சந்தை, வெம்பக்கோட்டை நீர்த்தேக்கங்களில் மீன் பிடிக்க ஏலம் விடப்பட உள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மீன்பிடி ஒப்பந்தம் (Fishing contract)

பொதுவாக, குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் மீன் பிடிக்க ஏலம் விடப்படுவது வழக்கம். அவ்வாறு ஏலம் எடுக்கும் தனிநபரோ, நிறுவனமே, மீன்களைப் பிடித்து விற்பனை செய்து வருமானம் ஈட்டிடுக்கொள்வதும் வழக்கம்.

இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜே.மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

5 ஆண்டுகள் குத்தகை (Lease for 5 years)

மாவட்டத்தில் வெம்பக்கோட்டை மற்றும் குல்லூர்சந்தை நீர்த்தேக்கங்களின் மீன்பிடி உரிமைகளை 5 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் (Download)

அவ்வாறுக் குத்தகைக்கு எடுக்க விருப்பம் உள்ளவர்கள், அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் அது தொடர்பான விவரங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தொடர்புக்கு (Contact)

மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், 114 ஆ 27/1 வேல்சாமி நகர், விருதுநகர் 626 001 என்ற முகவரியிலோ, அல்லது 04562 - 244707 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மீன் வளர்ப்புத் தொழிலை பெரிய அளவில் செய்ய விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதனை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, வருமானம் ஈட்டமுடியும். 

மேலும் படிக்க...

தக்காளி சாகுபடியில் பயிர் பாதுகாப்பு - தோட்டக்கலை துறை ஆலோசனை!!

உழவா் சந்தைகளை திறக்க அனுமதி அளிக்க கோரி விவசாயிகள் மனு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)