மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 September, 2022 8:50 PM IST
Water food

காலையில் நம்மில் பெருபாலானோர் இட்லி, தோசை, பொங்கல், வடை, கிச்சடி, பூரி உள்ளிட்ட உணவுகளில் ஏதாவது ஒன்றை அவசர அவசரமாக வயிற்றில் அடைத்துவிட்டு அலுவலகத்துக்குப் பறந்துவிடுவோம். இவை செரிமானமாக குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் பிடிக்கும். இதனால் அடிக்கடி புளிப்பு ஏப்பம், வயிற்று அசூசை ஏற்படலாம். ஆனால் கிராமங்களில் விவசாயிகள் பலர் காலை நீராகாரம் அருந்திச் சென்று மதியம்வரை ஏர் பிடித்து வேலை செய்வர். இது எவ்வாறு சாத்தியமாகிறது, நீராகாரத்தின் பலன்கள் என்னென்ன, காலை உணவாக இவற்றைச் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் உள்ளன எனப் பார்ப்போமா?

நீராகாரம்

கம்மங்கூழ் தொடங்கி நீர்மோர் வரை அனைத்துமே நீராகார வகையைச் சேர்ந்தவையே. திட உணவுக்கு மாற்றாக நீராகாரத்தை காலை உணவாக உட்கொண்டால் உடலுக்கு ப்ரோபயாடிக் சத்து கிடைப்பது மட்டுமல்லாமல் செரிமானமும் எளிதாகிறது.

பண்டைய காலத்தில் நீராகாரம் கடினமான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களது உணவாகத் திகழ்ந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெருநகரங்களில் கணினி முன் அமர்ந்து பணி செய்யும் ஊழியர்களுக்கும் இது அவசியமான உணவாகிறது.

அரிசி மாவில் தயாரிக்கப்படும் உணவுகள் அதிகளவு கார்போஹைட்ரேட்டை உடலில் சேர்ப்பதால் உடலில் வெற்று கலோரிகள் அதிகமாகச் சேர்க்கப்படும். இதனால் பகலில் பணிச் சோர்வு, தூக்கம் ஏற்படும். நீராகாரம் உடற்தசைகளுக்கு வெகுவிரைவில் சத்துக்களை கொண்டு சேர்ப்பதுடன் கொழுப்பு, கொலஸ்ட்ரால் சேராமல் உடலைப் பாதுகாக்கிறது.

வளரும் குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற காலை உணவாக உள்ள நீராகாரங்களைத் தயாரிப்பதும் சுலபம். இவற்றுடன் மோர் மிளகாய், மாங்காய் கீற்று, அப்பளம், சின்ன வெங்காயம் உள்ளிட்டவற்றை சேர்த்து சாப்பிட்டால் நீராகாரத்தின் சுவை அதிகரிக்கும்.

மசாலா மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளின் தாக்கத்தில் இருந்து உடலை டீடாக்ஸ் செய்யும் உணவாக அமையும் நீராகாரங்கள் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவாக உள்ளது.

மேலும் படிக்க

காலை சிற்றுண்டி திட்டம்: செப்டம்பர் 15 முதல் தொடக்கம்!

ஆரோக்கியமான தலை முடிக்கு அற்புதமான எண்ணெய் இதுதான்!

English Summary: Water food for breakfast: benefits for the body!
Published on: 08 September 2022, 08:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now