Health & Lifestyle

Sunday, 26 December 2021 10:55 AM , by: Elavarse Sivakumar

Credit: IndiaMART

முந்திரியை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டவராக இருந்தால், இனியாவது கவனமாக இருங்கள். ஏனெனில், அது பல்வேறு பக்கவிளைவுகளை உண்டாக்கும்.

சத்து நிறைந்த முந்திரி (Nutritious cashews)

முந்திரி (cashew) சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் இதில் உள்ளது, மேலும் வைட்டமின் ஈ அதிகளவில் இதில் நிறைந்துள்ளது.

வெறும் வயிற்சில் சாப்பிட்டால் (If eaten on an empty stomach)

ஆனால் சில உடல்நலப் பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில், முந்திரியை அதிகளவு எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். நீங்களும் அப்படிப்பட்டவராக இருப்பின், இந்த செய்தி உங்களுக்குதான். உடலுக்கு போஷாக்கு அளிப்பதாகக் கருதப்படும் முந்திரியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இத்தனை விளைவுகள் ஏற்படும். மக்களே உஷார்.

உயர் இரத்த அழுத்தம் (high blood pressure)

முந்திரி பருப்பில் (Cashew) சோடியம் உள்ளது. இதை அதிகமாக சாப்பிட்டால், உடலில் சோடியத்தின் அளவை அதிகரிக்கலாம். உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையில், சோடியம் அளவு அதிகரிப்பது உங்கள் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.

வாயுத் தொல்லை (Gas harassment)

முந்திரி பருப்பில் நார்ச்சத்து உள்ளது. இதனை அதிக அளவு மற்றும் வெறும் வயிற்றில் (Empty Stomach) சாப்பிடுவதால் உடலில் நார்ச்சத்து அதிகரிக்கிறது. இதனால் வாயு பிரச்சனை ஏற்படும்.

சிறுநீரக பிரச்சனை (Kidney problem

முந்திரியில் பொட்டாசியம் உள்ளது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், உடலில் பொட்டாசியத்தின் அளவை அதிகரிப்பது நோயை அதிகரிக்கும்.

சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள், முந்திரியை அதிகமாக உட்கொள்ள வேண்டாம். ஒரு நபர் ஒரு நாளைக்கு 4 முதல் 5 முந்திரி சாப்பிடுவதே உடல்நலத்திற்கு நல்லது.

மேலும் படிக்க...

குளிர்காலத்தில் மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

வலிப்பு நோய்க்கு நிரந்தர தீர்வு: மருத்துவர் விளக்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)