மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 October, 2022 12:44 PM IST
Ulcer

இன்றைய நவீன யுகத்தில், நோய்கள் பலவும் மனிதர்களை தாக்கி வருகிறது. அதில் ஒன்று தான் அல்சர் எனும் வியாதி. பொதுவாக, சரியான நேரத்திற்கு உணவு உண்ணவில்லை என்றால், அல்சர் வந்துவிடும் என்ற கருத்து மக்களிடையே பரவலாக பரவியுள்ளது. இது சரியா அல்லது தவறா? என்றும், அல்சர் எதனால் வருகிறது என்றும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

அல்சர் எப்படி உருவாகிறது?

நம் குடலின் மேற்பரப்பில் மியூகோஸா படலம் என்ற சவ்வு உள்ளது. இது நாள்பட்ட மற்றும் எரிச்சல் உண்டாக்கும் அதிக அமில சுரப்பினால் பாதிக்கப்பட்டு சிதைந்து விடுகிறது. அதிகளவிலான அமில சுரப்பு மற்றும் பெப்சின் (செரிமான என்சைம்) சுரப்பினாலும், காரமான மசாலா மற்றும் பொரித்த உணவுகள் உண்பதாலும் குடலில் புண்கள் தோன்றும். வயிற்று லைனிங்கில் ஓட்டை ஏற்பட்டு, அதன் பிறகு புண்கள் உருவாகும். இதற்கு முக்கிய காரணம் அவசரம், மன அழுத்தம், மனப் பதற்றம், மனக் கவலை, பொறாமை ஆகும்.

அதோடு காரசாரமான உணவு மற்றும் மசாலா அதிக அமிலத்தை சுரக்க வைத்து வயிற்றுக் குடலில் புண்களை உண்டாக்குகிறது. வயிற்றில் அல்சர்களை தோற்றுவிக்கும் இன்னொரு மிக முக்கியமான காரணம் Helicobacterpylori (ஹெலிகோபேக்டர் பைலோரி) எனும் ஒரு வகையான பாக்டீரியா. இந்த வகை பாக்டீரியா அசுத்தமான சூழ்நிலை, குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களால் பரவுகிறது. வயிற்றில் அமிலத்தை நீர்க்க வைத்து, கேஸ்ட்ரைடீஸ் எனும் வீக்கத்தை உண்டாக்குகிறது. பின்னர், நாளடைவில் இந்த கேஸ்ட்ரைடீஸ், அல்சராக மாறுவதற்கு, எச்.பைலோரி என்ற கிருமிகள் உதவுகிறது.

அதிக அளவில் மது அருந்துதல், புகைப்பிடித்தல், தவறான உணவுப் பழக்க வழக்கங்கள், நேரம் காலமின்றி உணவு உண்பது, அசுத்தமான பழக்கங்கள், கைகளை கழுவாமல் உணவு உண்பது, கைவிரல் நகத்தை கடிப்பது, அதிக டீ மற்றும் காபி குடிப்பது, ஆஸ்பிரின் போன்ற மருந்துகள், மன அழுத்தம், டென்ஷன், மனபரபரப்பு, அடிக்கடி உணர்ச்சி வசப்படுவது இப்படி பல காரணங்களால் அல்சர் வந்து விடுகிறது.

மேற்கண்ட அசுத்தமான பழக்கங்களை தவிர்த்தால், வயிற்றில் புண் வருவதை தவிர்த்து விடலாம். மேலும், சரியான நேரத்தில், அதாவது பசிக்கும் போது கால தாமதம் செய்யாமல் உடனே உணவு உண்ண வேண்டும். உணவு உண்பதற்கு 30 நிமிடங்கள் முன்பாகவும், உணவு உண்ட பிறகு 30 நிமிடங்கள் கழித்தும் தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க

காளானில் இவ்வளவு சத்துக்களா: தெரிஞ்சா விட மாட்டிங்க!

சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு: சாதத்தை இப்படி சாப்பிட்டு பாருங்க!

English Summary: What can we do to prevent ulcers?
Published on: 18 October 2022, 12:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now