Health & Lifestyle

Thursday, 20 January 2022 02:32 PM , by: R. Balakrishnan

When to Eat Healthy Apples

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பழங்களில் ஒன்று தான் ஆப்பிள். இதில் போதுமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நோய் எதிர்ப்பு கூறுகள் உள்ளன. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, சில விசேஷ கூறுகள் ஆப்பிளில் (Apple) காணப்படுகின்றன. இவை உடலில் புதிய செல்கள் உருவாவதை ஊக்குவிக்கின்றன. சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைப்பதில் ஆப்பிள் நன்மை பயக்கும். மேலும், இது உடலில் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும்.

ஆப்பிளின் பயன்கள் (Benefits of Apple)

தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் (Diabetes) மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது.

ஆப்பிளில் வைட்டமின் சி சீரான அளவில் உள்ளது. இதனுடன் இரும்புச்சத்தும் போரானும் இதில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் இணைந்தால் எலும்புகளுக்கு பலம் கிடைக்கும்.

எப்போது சாப்பிட வேண்டும்!

  • மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆப்பிள் சாப்பிடுவது நன்மை பயக்கும்.
  • சிறுநீரக கல் பிரச்சனையை தவிர்க்க தினமும் காலையில் ஆப்பிளை சாப்பிடலாம்.
  • ஆப்பிள் சாப்பிடுவது, வயதாவதால் மூளையில் ஏற்படும் பாதிப்பை நீக்க உதவுகிறது. ஆப்பிளில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. இது செரிமான (Digestion) செயல்முறையை சரியாக வைத்திருக்க உதவுகிறது.
  • ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து பற்களை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.
  • ஆப்பிளை தவறாமல் உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
  • தினமும் ஆப்பிளை தவறாமல் உட்கொள்வது டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
  • ஆப்பிள் சாப்பிடுவது இதயத்திற்கு மிகவும் நல்லது. மலச்சிக்கல் பிரச்சனையும் வராது
  • ஆப்பிளின் வழக்கமான பயன்பாடு எடையைக் கட்டுப்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும்.
    தினமும் காலையில் ஆப்பிள் ஜூஸ் சாப்பிட்டு வந்தால், முகத்தில் உள்ள புள்ளிகள் குறையும்.
  • மருத்துவர்களின் கருத்துப்படி, ஆப்பிளை எந்த நேரத்திலும் சாப்பிடலாம்.
  • காலையில் ஆப்பிளை உட்கொண்டால், அதிக பலன் கிடைக்கும். ஏனெனில் ஆப்பிளில் நார்ச்சத்தும் பெக்டின் சத்தும் அதிகமாக உள்ளது. எனவே, இதை இரவில் உட்கொண்டால், செரிமானம் செய்வதில் சிக்கல் ஏற்படலாம்.

மேலும் படிக்க

சூடான நீரில் குளித்தால் இவ்வளவு பிரச்னைகள் வருமா?

மாதுளம் பூவின் அளப்பரிய நன்மைகள் என்னவென்று தெரியுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)