Health & Lifestyle

Thursday, 19 November 2020 08:57 AM , by: Elavarse Sivakumar

Credit : Gardening

குளிர்காலத்திற்கு ஏற்ற சிற்றுண்டிகளில் ஒன்று மரவள்ளிக் கிழங்கு. நம்மில் பலரும் பள்ளிப்பருவத்தில், இந்த கிழங்கை அதிகளவில் வாங்கி உண்டிருப்பர். அந்தக் காலத்தில் காஃபி வித் மரவள்ளி (Cofee with maravalli) என்றும் சொல்வதுண்டு.

மருத்துவப் பயன்கள் (Benefits)

  • மரவள்ளிக்கிழங்கில் உள்ள இரும்பு, தாமிரம் ரத்த சோகையை கட்டுப்படுத்தும்.

  • அதிக நார்சத்து இருப்பதால் எளிதில் சீரணமாக உதவும்.

  • இதில் இடம்பெற்றுள்ள புரத சத்தும், வைட்டமின் கேவும், எலும்பு மற்றும் திசுக்கள் ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கிறது.

  • இதிலிருந்து தயாரிக்கப்படும் முக்கிய மாவுப் பொருள் ஜவ்வரிசி. இது கஞ்சி, பாயசம் செய்ய உதவும்.

  • இக்கஞ்சி வயிற்று புண் ஆறுவதற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

  • இக்கிழங்கிலிருந்து சிப்ஸ் (Chips), முறுக்குகள் செய்து கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர போன்ற பகுதிகளில் விற்கப்படுகிறது.

  • மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் பல்வேறு துறைகளில், குறிப்பாக பருத்தி மற்றும் சணல் ஆடைகள் உற்பத்தி, காகிதம், நாட்காட்டி தயாரிப்பு, கோந்து மற்றும் கெட்டியான அட்டைகள் தயாரிக்கும் தொழிலில் முக்கியமான மூலப்பொருளாக பயன்படுகிறது.

  • ஜவுளி தொழிலில் துணிகளுக்கு கஞ்சி போட்டு மொடமொடப்பான தன்மை ஏற்படுத்த பயன்படுகிறது.

  • மரவள்ளி ஸ்டார்சிலிருந்து நேரடியாக "பயோ-எத்தனால்" என்ற எரிபொருள் உற்பத்தி செய்ய முடியும். பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றாக உற்பத்தி செய்து காற்று மாசை குறைத்து புவி வெப்பமடைவதை தவிர்க்கலாம்.

Credit : SBS

தீமைகள் (Disadvantages)

  • மரவள்ளிக்கிழங்கிலும் சர்க்கரை சத்து அதிகமாகவே இருக்கிறது. ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கை விட கொஞ்சம் குறைவு தான்.

  • இதனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், அவர்களின் ரத்ததத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. 

  • இதில் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து சாப்பிடுவார்கள். அதேபோல இந்த கிழங்கில் சிப்ஸ் போட்டும் உண்பார்கள். இந்த கிழங்கு மலச்சிக்கலையும், வாயுத்தொல்லையையும் ஏற்படுத்தும்.

தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை

மேலும் படிக்க....

எப்போது மின்னல் தாக்கும்?- தெரிந்துகொள்ள Damini-App

கூடுதல் மகசூலுக்கு பறவைகளும் முக்கியமே !

பயிருக்கு உயிரூட்டும் தயிர்- பொன்னியமாக மாற்றி யூரியாவிற்கு பதிலாக பயன்படுத்தலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)