சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 2 August, 2019 5:41 PM IST
Hair Fall

தலை முடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒவ்வொருவரின் உடல் அமைப்பு, உட்கொள்ளும் உணவு முறை, பயன்படுத்தும் ஷாம்பு, சிப்பு, டவல் என அனைத்தும் முக்கிய காரணிகள் ஆகலாம். சிலருக்கு பரம்பரை பரம்பரையாக வழுக்கை பிரச்சனை இருந்து வரும்.     

முதலில் தலை முடியில் பொதுவாக ஏற்படும் பிரச்சனைகள்

  • முடி உதிர்வு
  • நரை முடி/ இள நரை
  • வழுக்கை விழுதல்
  • புழு வெட்டு
  • அடர்த்தி இல்லாமை
  • பொடுகு தொல்லை

தலை முடி பிரச்சனைகள் அனைத்திற்கும் ஆயுர்வேதத்தில் மருந்து உண்டு என்கிறார்கள். முறையான பராமரிப்பு, இரும்பு சத்து நிறைந்த உணவுகள் போன்றவை அழகான கூந்தலை தரும்.  தலை முடி   பிரச்சனைக்கான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

முடி உதிர்வதற்கான காரணங்கள்

  • புரதச்சத்துப் பற்றாக்குறை
  • இரும்புச்சத்துப் பற்றாக்குறை
  • துத்தநாகப் பற்றாக்குறை
  • ஹார்மோன் குறைபாடு
  • பாரம்பரிய வகை

முடி உதிர்வதற்கான தீர்வுகள்

  • முதலில் இரும்பு சத்து நிறைந்த உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். முளைக்கட்டிய தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
  • வாரம் இருமுறையெனும் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். கடைகளில் விற்கும் வாசனை எண்ணெய்களை தவிர்த்து வீட்டிலேயே இயற்கையான முறையில் எண்ணெய் தயாரிக்கும் போது அதன் பலன் பல மடங்காகும். அதிக அளவில் தயாரித்து வைக்காமல் ஒரு மாதத்திற்கு என்ற அளவில் தயாரித்து வைத்து பயன்படுத்த வேண்டும்.
  • ஷாம்புக்களை தேர்தெடுக்கும் போது அதிக அளவு கெமிக்கல்ஸ் இல்லாதவைகளாக இருக்க வேண்டும். சிகக்காய் பயன் படுத்துவது சால சிறந்தது.
  • இரண்டு வாரத்திற்கு ஒரு முறையேனும் நீங்கள் பயன்படுத்தும் சிப்பிணை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • மெல்லிய துணிகளைக் கொண்டு தலையை துவட்ட வேண்டும். இயற்கையான முறையில் உலர்த்த வேண்டும். ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கூந்தல் தைலம் தயாரிக்கும் முறை

  • மருதாணி - 1/2 கப்
  • கறிவேப்பிலை - 1 கப்
  • வெங்காயம் - 3 - 4 (இடித்து வைத்து கொள்ளவும் )
  • வெந்தயம் - 1/4 கப்
  • சீரகம் - 1/2 ஸ்பூன்
  • நெல்லிக்காய் - 1/2 கப் ( உலர்த்தியது )
  • செம்பருத்தி பூ - 3- 4 ( உலர்த்தியது )
  • நல்லெண்ணெய் - 100 மி.லி
  • தேங்காய் எண்ணெய் - 200 மி.லி

முதலில் ஒரு வாயகன்ற இரும்பு கடாயில் நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். சிறிது சூடானதும்  தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். முதலில் வெங்காயம் சேர்க்க வேண்டும். பின் வெந்தயம், சீரகம், உலர்ந்த நெல்லி, செம்பருத்தி பூ,  மருதாணி, கறிவேப்பிலை என ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்க வேண்டும். எந்த பொருளும் கருக கூடாது. இதை தயாரிப்பதற்கான கால அளவு 10 முதல் 15 நிமிடங்கள். இந்த எண்ணெய் அறிய பிறகு ஒரு மெல்லிய துணியினால் வடிகட்டி கண்ணாடி குடுவையில் வைத்து பயன்படுத்தலாம்.

மேல குறிப்பிட்டுள்ள தைலம் உங்களின் எல்லா விதமான பிரச்சனைக்கும் தீர்வாகும். வாரம் இருமுறை  இந்த எண்னெய் இரவு தூங்கும் முன்பு வேர்க்கால்களில் தேய்த்து மெதுவாக தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும். மறுநாள் ஷாம்பு அல்லது சிக்காய் தேய்த்து குளித்து வர அனைத்து தலை முடி பிரச்சனையும் தீரும். வாருங்கள் சிக்காய் தயாரிக்கும் முறையை பார்ப்போம்.

சிக்காய் தயாரிக்கும் முறை

  • சீயக்காய் - 1 கிலோ
  • செம்பருத்திப்பூ / இலை - 50
  • பூலாங்கிழங்கு - 100 கிராம்
  • எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்) - 25
  • துளசி / வேப்பிலை (புழுவெட்டு )- கைப்பிடியளவு (உலர்த்தியது)
  • பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) – கால் கிலோ
  • மருக்கொழுந்து (வாசனைக்கு) – 20 குச்சிகள்
  • கரிசலாங்கண்ணி இலை (முடி கருப்பாக) – 3 கப் அளவு

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் வெயிலில் காய வைத்து பவுடர் செய்து கொள்ள வேண்டும். இதனை தலைக்கு தேய்த்து குளித்து வர தலை முடி பிரச்சனை படிப்படியா குறையும்.

இன்றைய நவீன உலகில் பெரும்பாலான நல்ல விஷயங்களை நாம் இழந்து விட்டோம் எனலாம். இழந்த அனைத்தையும் இயற்கை கொண்டே சரி செய்ய வேண்டும். இவை அனைத்தையும் செய்வதற்கு கொஞ்சம் அதிகமாக நேரம் தேவைபடும். அதே போல் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் தொடர்ந்து செய்து வந்தால் தான் பலன் கிடைக்கும். எல்லா வற்றுக்கும் மேலாக பொறுமை  மிக மிக முக்கியம். 

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Worring About Hair Fall: Come Let Us Put Full Stop: All Your Hair Problem Have Herbal Solution
Published on: 02 August 2019, 05:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now